ஆறுதல்! 3வது நாளாக குறையும் கொரோனா - இப்படியே போச்சுன்னா பெட்டர்
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை மீண்டும் குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கும் தகவலாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை விளாசி வருகிறது. நாட்டின் இந்த குடும்பங்களையும் இது விட்டுவைக்கவில்லை. அந்தளவுக்கு மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.

ஒருபக்கம், தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் ரெமிடிசிவிர் தட்டுப்பாடு நிலவுவதால், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2 கோடியை கடந்திருக்கிறது. நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 3,57, 229 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 3,68,147 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் மொத்த பாதிப்பு 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக அதிகரித்திருக்கிறது.
அதேசமயம், தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் குறைந்துள்ளது. கடந்த சனிக்கிழமை 4.01 லட்சம், நேற்று முன் தினம் 3.92 லட்சம், நேற்று 3.68 லட்சம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 3.57 லட்சமாக எண்ணிக்கை குறைந்துள்ளது.
தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக உள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 47ஆயிரத்து 133 ஆகும். நாடு முழுவதும் இதுவரை 15 கோடியே 89 லட்சத்து 32 ஆயிரத்து 921 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications