இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- 24 மணிநேரத்தில் 37,379 பேருக்கு தொற்று உறுதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 37,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் நேற்று மட்டும் 124 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,892 ஆக அதிகரித்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா 10-வது இடத்தில் உள்ளது. முதல் 2 இடங்களில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் உள்ளன.

 இந்தியாவில் அதிகரிப்பு

இந்தியாவில் அதிகரிப்பு

இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இன்று காலை 8 மணியுடனான 24 மணிநேர நிலவரப்படி 37,379 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 117 நாட்களில் மிக அதிகமான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இது. மேலும் 124 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

 இந்தியாவில் ஓமிக்ரான் எண்ணிக்கை

இந்தியாவில் ஓமிக்ரான் எண்ணிக்கை

கொரோனா பாதிப்பில் இருந்து 11,007 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலையில் 26,248 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றன ஆக்டிவ் கேஸ்கள். நாட்டில் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,892 ஆக உயர்ந்துள்ளது.

 மகாராஷ்டிராவில் அதிகம்

மகாராஷ்டிராவில் அதிகம்

நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. இம்மாநிலத்தில் நேற்று 12,160 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதற்கு அடுத்ததாக மேற்கு வங்க மாநிலத்தில் 6,078 பேருக்கும் டெல்லியில் 4,099 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கேரளாவில் கொரோனாவால் ஏற்பட்ட முந்தைய மரணங்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து மொத்தம் 71 உயிரிழப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 13 பேரும் மகாராஷ்டிராவில் 11 பேரும் நேற்று கொரோனாவால் மரணம் அடைந்தனர்.

Recommended Video

    இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளது - மா சுப்பிரமணியன்
     ஒரே நாளில் 99.28 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள்

    ஒரே நாளில் 99.28 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள்

    நாடு முழுவதும் இதுவரை 146.70 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 99.28 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 23.50 லட்சம்; 2-வது டோஸ் போட்டுக் கொண்டவர்கள் 33.70 லட்சம் பேர். 15-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 42.06 லட்சம் பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+