இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு- நேற்று 43,509 பேருக்கு தொற்று உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 43,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 84,534 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

India reports 43,509 new Coronavirus cases in last 24 hours

பிரேசில், ஈரான், இந்தோனேசியா, ரஷ்யா ஆகிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்தியாவில் இந்தியாவில் நேற்று 17,28,795 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 43,509 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவில் இதுவரை 46,26,29,773 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,465 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தனர். நாட்டில் மொத்தம் 3,07,01,612 பேர் கொரோனாவால் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் நாட்டில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் (ஆக்டிவ் கேஸ்கள்) எண்ணிக்கை 4,03,840 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பில் இது 1.28% ஆகும். கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 640 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் கேரளாவில்தான் மிக அதிகமான பாதிப்பு உள்ளது. கேரளாவில் நேற்று மட்டும் 22,056 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மகாராஷ்டிராவில் 6,857, ஆந்திராவில் 2,010, தமிழகத்தில் 1,756, கர்நாடகாவில் 1,531 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நாட்டில் இதுவரை மொத்தம் 45.07 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+