மாஸ் காட்டும் அணுசக்தி கொண்டு நீர்மூழ்கி கப்பல்.. ரூ.22,000 கோடி.. இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம்!
இந்தியா ரஷ்யா இடையே 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video

டெல்லி: இந்தியா ரஷ்யா இடையே 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. நேற்று இந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக கையெழுத்திடப்பட்டது.
இந்தியா உலகில் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள், ராணுவ தளவாட பொருட்களை இறக்குமதி செய்கிறது என்றுதான் கூற வேண்டும். முக்கியமாக பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக எண்ணிக்கையிலான ராணுவ தளவாடங்களை வாங்கி கொண்டு இருக்கிறது.
ரஷ்யாவுடன் தற்போது இந்தியா அதிக அளவில் நெருக்கம் காட்டி வருகிறது. ரஷ்யாவுடன் இந்தியா நிறைய ராணுவ ஒப்பந்தங்களை செய்யும் முடிவில் உள்ளது.

எப்படி
கடந்த வாரம் உத்தர பிரதேசம் மாநிலம் அமேதியில் பிரதமர் மோடி ஏகே 203 ரக துப்பாக்கிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை துவங்கி வைத்தார். இந்த தொழிற்சாலை ரஷ்யாவின் உதவியுடன் செயல்படும் தொழிற்சாலை ஆகும். இந்த தொழிற்சாலை திறக்கப்பட்ட போதுதான் நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தமும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எப்படிப்பட்ட ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவிற்கு அக்யூலா கிளாஸ் நீர்மூழ்கி கப்பலை ரஷ்யா வழங்கும். இது 1986ல் வடிவமைக்கப்பட்ட நீர் மூழ்கி கப்பல் ஆகும். இதை தற்போது புதிதாக அப்டேட் செய்து இருக்கிறார்கள். இதை சக்ரா 3 நீர்மூழ்கி கப்பல் என்று இந்தியாவில் அழைக்கிறார்கள்.

எவ்வளவு ஒப்பந்தம்
இந்த கப்பல் அணுசக்தியால் இயங்க கூடியது. இந்த ஒப்பந்தம் 22 ஆயிரம் கோடி ரூபாயில் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நீர்மூழ்கி கப்பலுடன் அதில் இருக்கும் ஆயுதங்களும் இறக்குமதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 2025ல் இந்த நீர்மூழ்கி கப்பல் இந்தியாவிடம் அளிக்கப்படும்.

பலம்
இந்திய கடற்படைக்கு இந்த கப்பல் புதிய பலம் சேர்க்கும் என்கிறார்கள். இந்தியாவிடம் இருந்த சக்ரா 1 கப்பல் சில வருடங்களுக்கு முன் விடைபெற்றது. தற்போது நாம் சக்ரா 2 கப்பலை பயன்படுத்தி வருகிறோம். இந்த ரஷ்யா கப்பலின் லீஸ் 2022ல் முடிய உள்ளது. அதன்பின் இதன் மீதான லீஸ் நீட்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா?












Click it and Unblock the Notifications