இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 ஆயிரத்தை தாண்டியது- உயிரிழப்பு 2 ஆயிரத்தை கடந்தது
டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
Recommended Video
நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,939 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 2109 ஆகவும் உயர்ந்துள்ளது..

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 20, 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மகாராஷ்டிராவில் கொரோனா மரணங்கள் 779 ஆக அதிகரித்திருக்கிறது.
இம்மாநிலத்தைத் தொடர்ந்து குஜராத்தில் 7796 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 472 ஆக உயர்ந்துள்ளது. 3-வது இடத்தில் டெல்லி மாநிலம் உள்ளது. டெல்லியில் 6542 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 73 பேர் மரணமடைந்துள்ளனர்.
தமிழகத்ததில் 44 பேர் மரணமடைந்த நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6535 ஆக உயர்ந்திருக்கிறது. தமிழகத்தில் 1824 பேர் குணமடைந்தும் உள்ளனர். மத்திய பிரதேசத்தில் 3614 பேரும் ராஜஸ்தானில் 3708 பேரும் பஞ்சாப் மாநிலத்தில் 1762 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உ.பி.யில் 74 பேரை பலி கொண்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3373 ஆகும்.












Click it and Unblock the Notifications