சபாஷ்.. புலிகள் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்வு.. நாட்டு மக்களுக்கு இது ரொம்பவே நல்ல செய்தி தெரியுமா!
டெல்லி: இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்துள்ளது என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பு ரொம்பவே முக்கியமான ஒன்று. ஏன் தெரியுமா? இந்த எண்ணிக்கை 2006ல் இருந்து ஒப்பிட்டால், இரு மடங்காக அதிகரித்து உள்ளது. கண்டிப்பாக இது சூப்பர் செய்திதான்.
புலிகளின் அதிகரிப்பு ஏன் மனிதர்களுக்கும் முக்கியமானது தெரியுமா? இதோ பாருங்கள்:

"புலி என்பது வேட்டையாடும் விலங்குகளில் உச்சபட்ச படிநிலையில் உள்ளது. இதன் வேட்டையாடும் பகுதி, நீண்ட தூரத்தை உள்ளடக்கியது. ஒரு புலியைப் பாதுகாப்பது என்பது சுற்றுச்சூழல் அமைப்பையும் அந்த குறிப்பிட்ட வன வாழ்விடத்தையும் பாதுகாப்பதாகும். புலிகளைப் பாதுகாப்பது காடுகள் மற்றும் நதிகளின் புனராக்கம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் சேவைகளை எவ்வாறு மேம்படுத்துகிறது என்பது குறித்த ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளன" என்று சொல்கிறார் ஐஎஃப்எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான்.
கர்நாடகாவைச் சேர்ந்த மற்றொரு ஐ.எஃப்.எஸ் அதிகாரி தீபிகா பாஜ்பாய் கூறுகையில், "புலிகள் வனத்தின் முக்கிய ஆதாரம். மற்ற அனைத்து உயிரினங்களும் பாதுகாக்கப்படுவதை புலிகள்தான் உறுதி செய்கின்றன. புலிகள் நீண்ட தூர விலங்குகளாக இருப்பதால், வாழ்விடங்கள் பாதுகாக்கப்படுகின்றன. புலிகள் இறந்தால், பிற உயிரினங்களும் பாதிக்கப்படும்" என்றார்.
இந்தியாவின் புலிகள் பாதுகாப்பு திட்டம் ஒரு பெரிய சாதனை என்று அடிக்கோடிட்டுக் காட்டிய பிரதமர் மோடி, 2018 ஆம் ஆண்டில் புலிகளின் எண்ணிக்கை 2,967 ஆக உயர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டில் 2,226 புலிகள் இருந்ததை ஒப்பிட்டால் இது 33 சதவீதம் அதிகரிப்பாகும்.
2006 இல் நடத்தப்பட்ட முதல் புலிகள் கணக்கெடுப்பின்போது, நாடு முழுக்க மொத்தமே 1,411 புலிகள்தான் இருப்பதாக வெளியான தகவல் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்துதான், மத்திய அரசு புலிகளை காப்பாற்றும் திட்டத்தை கொண்டு வந்தது. இந்த முன்னேற்றம் வரலாற்று சாதனை என்று தெரிவித்துள்ளார் மோடி.

"2022 க்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு குறிக்கோள் தீட்டப்பட்டது. ஆனால் இந்தியா நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அதை அடைந்துள்ளது" என்று மோடி மேலும் கூறினார்.
புதிய புலிகள், தொகை கணக்கெடுப்பின்படி, மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான, அதாவது 526 புலிகள் உள்ளன. கர்நாடகா மிக நெருக்கமான இடத்தில் உள்ளது. அங்கு 524 புலிகளும், உத்தரகண்ட்டில் 442 புலிகளும் உள்ளன. தமிழகத்தில் 250 புலிகள் உள்ளன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications