இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 11,929 பேருக்கு கொரோனா பாதிப்பு- 311 பேர் மரணம்
டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக 24 மணிநேரத்தில் 11,929 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 311 பேர் மரணித்துள்ளனர்.
உலக நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யாவை தொடர்ந்து கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11,929 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையானது 3,20,922 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,62,379 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் 311 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கையானது 9195 ஆகவும் அதிகரித்துள்ளது.
மாநிலங்களில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது. 2-வது இடத்தில் தமிழகம் இருந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
கொரோனா உயிரிழப்புகளில் மகாராஷ்டிரா முதலிடத்திலும் குஜராத் 2-வது இடம்; டெல்லி 3-வது இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications