கொரோனா ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு...கனடாவுக்கு இந்தியா பதிலடி!
டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து கருத்து கூறி வரும் நிலையில், அடுத்த வாரம் கனடா சார்பில் நடைபெறும் கொரோனா ஆலோசனை கூட்டத்தை புறக்கணிக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் கனடா அரசிடம் தெரிவித்து விட்டதாகவும் தெரிகிறது. கடந்த மாதம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்தியா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுகுறித்து எந்த எந்நாடுகளும் கருத்து தெரிவிக்காத நிலையில் கனடா முதன் முறையாக வாய் திறந்தது.இதுகுறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 'இந்திய விவசாயிகள் போராட்டம் குறித்த செய்தி, கவலை அளிக்கிறது. அமைதியாக போராடும் விவசாயிகளின் உரிமைகளை பாதுகாக்க, கனடா எப்போதும் துணை நிற்கும்' என்றார்..
இதற்கு உடனடியாக பதிலடி கொடுத்த இந்தியா, 'உண்மை நிலவரம் தெரியாமல், இந்தியாவின் உள்நாட்டு பிரச்னையில் தலையிட வேண்டாம்' என தெரிவித்தது.மேலும் இந்தியாவுக்கான கனடா துாதர் நதிர் படேலுக்கு, வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பியதுடன், கனடாவுக்கும், இந்தியாவுக்கும் உள்ள உறவுகள் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரித்து இருந்தது.ஆனால் இந்தியாவின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அமைதியான போராட்டம் எங்கு நடந்தாலும் கனடா அவர்களுக்கு துணை நிற்கும்' என மீண்டும் விவசாயிகளுக்கு ஆதரவாக கூறி உள்ளதால் இந்தியா கடும் கோபம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக அடுத்த வாரம் கனடா நடத்தும் கொரோனா ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என இந்தியா முடிவு எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. கனடாவில் டிசம்பர் 7-ம் தேதி அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் தலைமையில் கொரோனா தொற்று குறித்து விவாதிக்க ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
சில திட்டமிட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்ள மாட்டார் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கனடா அரசிடம் தெரிவித்து உள்ளதாக டெல்லி அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் கடந்த மாதம் கனடாவில் கொரோனா தொற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஜெய்சங்கர், இது தொடர்பாக சுட்டுரையில் பதிவும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications