80 நாட்களுக்குப் பின் பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் திறப்பு- நீண்டவரிசைகளில் காத்திருந்து வழிபாடு!
டெல்லி: கொரோனா லாக்டவுனால் 80 நாட்களாக மூடப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டன. இதேபோல் ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.
Recommended Video
கொரோனா லாக்டவுனால் நாட்டின் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. அதேநேரத்தில் கோவில்களில் முக்கியமான பூஜைகளை அர்ச்சகர்கள் மட்டும் நடத்தவும் அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் இன்று முதல் 80 நாட்களுக்குப் பின்னர் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

டெல்லியில் வழிபாட்டு தலங்கள் திறப்பு
அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். டெல்லியில் இன்று காலையிலேயே பல்வேறு கோவில்களும் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் மசூதிகளில் இன்று காலையில் சமூக இடைவெளியுடன் தொழுகைகள் நடத்தப்பட்டன. முன்னதாக அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் இன்றும் நாளையும் முதல் கட்டமாக உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருப்பதி நிலவரம்
பக்தர்கள் அனைவரும் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருப்பதியில் வரும் 11-ந் தேதிக்குப் பின்னர் பிற மாநிலங்களின் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். திருப்பதியில் வழக்கம் போல முடி காணிக்கை செலுத்தவும், திருமணங்கள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் சபரிமலையில் வரும் 14-ந் தேதிதான் நடை திறக்கப்பட உள்ளது.

சபரிமலையில் அனுமதி
ஆன்லைன் மூலமே தரிசன அனுமதியை பக்தர்கள் பெற முடியும். சபரிமலையில் 1 மணிநேரத்துக்கு 200 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். குருவாயூரில் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இன்று கோவில்கள் திறக்கப்படவில்லை. மகாராஷ்டிரா, கோவாவில் பெரும்பாலான கோவில்கள் திறக்கப்படவில்லை. டெல்லியில் ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் முழுமையாக் திறக்கப்பட்டுள்ளன.

ஹோட்டல்கள், மால்கள்
ஹோட்டல்களில் இன்று முதல் வாடிக்கையாளர்கள் அனைவரும் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஏற்கனவே உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்றது. தமிழக அரசும் இது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications