80 நாட்களுக்குப் பின் பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் திறப்பு- நீண்டவரிசைகளில் காத்திருந்து வழிபாடு!
டெல்லி: கொரோனா லாக்டவுனால் 80 நாட்களாக மூடப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டன. இதேபோல் ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.
Recommended Video
கொரோனா லாக்டவுனால் நாட்டின் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. அதேநேரத்தில் கோவில்களில் முக்கியமான பூஜைகளை அர்ச்சகர்கள் மட்டும் நடத்தவும் அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் இன்று முதல் 80 நாட்களுக்குப் பின்னர் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

டெல்லியில் வழிபாட்டு தலங்கள் திறப்பு
அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். டெல்லியில் இன்று காலையிலேயே பல்வேறு கோவில்களும் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் மசூதிகளில் இன்று காலையில் சமூக இடைவெளியுடன் தொழுகைகள் நடத்தப்பட்டன. முன்னதாக அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் இன்றும் நாளையும் முதல் கட்டமாக உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருப்பதி நிலவரம்
பக்தர்கள் அனைவரும் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருப்பதியில் வரும் 11-ந் தேதிக்குப் பின்னர் பிற மாநிலங்களின் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். திருப்பதியில் வழக்கம் போல முடி காணிக்கை செலுத்தவும், திருமணங்கள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் சபரிமலையில் வரும் 14-ந் தேதிதான் நடை திறக்கப்பட உள்ளது.

சபரிமலையில் அனுமதி
ஆன்லைன் மூலமே தரிசன அனுமதியை பக்தர்கள் பெற முடியும். சபரிமலையில் 1 மணிநேரத்துக்கு 200 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். குருவாயூரில் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இன்று கோவில்கள் திறக்கப்படவில்லை. மகாராஷ்டிரா, கோவாவில் பெரும்பாலான கோவில்கள் திறக்கப்படவில்லை. டெல்லியில் ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் முழுமையாக் திறக்கப்பட்டுள்ளன.

ஹோட்டல்கள், மால்கள்
ஹோட்டல்களில் இன்று முதல் வாடிக்கையாளர்கள் அனைவரும் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஏற்கனவே உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்றது. தமிழக அரசும் இது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு!












Click it and Unblock the Notifications