முப்படைகளுக்கும் முழு சுதந்திரம்.. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி.. அவசர ஆலோசனையில் மோடி அதிரடி உத்தரவு
டெல்லி: எந்தவித அழுத்தத்திற்கும் பணிந்து போகாமல், தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படை விமானி அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவ வீரர்களால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பாக உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர்.
இதில் பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள இந்திய பைலட்டை மீட்பது தொடர்பாகவும், பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சுமார் 90 நிமிடங்களுக்கு இந்த ஆலோசனை விரிவாக அமைந்திருந்தது.
இது தொடர்பாக பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறுகையில், "இந்திய தரைப்படை, கடற்படை, மற்றும் வான்படை ஆகிய முப்படைகளுக்கும், முழு சுதந்திரம் அளிப்பதாக இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சரியான நேரத்தில் பாகிஸ்தானுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது" இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications