கடல்வழி தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம்... இந்திய கடற்படை தளபதி தகவல்
டெல்லி: மும்பை தாக்குதல் போல் கடல் வழியாக இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய கடற்படை தளபதி சுனில் லன்மா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த இந்தோ - பசிபிக் கருத்தரங்கில் அவர் பங்கேற்று பேசினார்.
அப்போது, புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த இந்தியாவை சீர்லைக்க முயற்சிக்கும் நாடு ஒன்று, தீவிரவாதிகளுக்கு உதவுவதாக மறைமுகமாக பாகிஸ்தானை சாடினார்.

தீவிரவாதிகள் பயிற்சி
கடல் வழியாக சென்று தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார் . தீவிரவாதத்தின்அனைத்து வடிவங்களையும் அழிக்க சர்வதேச சமுதாயம் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றும் கடற்படை தளபதி சுனில் லன்மா வலியுறுத்தினார்.

2008-ல் தாக்குதல்
கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீனவர்களின் படகை கடத்திக் கொண்டு கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 160க்கும் அதிகமானோர் பலியானார்கள். அதேபோல் மற்றொரு தாக்குதலை நிகழ்த்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வீடியோ வெளியீடு
இந்நிலையில், இந்திய நீர்மூழ்கி கப்பல் ஒன்று, பாகிஸ்தான் பகுதிக்குள் நுழைய முயற்சி செய்தது. ஆனால், அதனை தங்களது கடற்படை தடுத்து நிறுத்தியது. அமைதி என்ற பாகிஸ்தானின் கொள்கை காரணமாக, இந்திய கப்பலை நாங்கள் தாக்கவில்லை. என்று பாகிஸ்தான் கடற்படை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பொய் பிரச்சாரம்
மேலும், இந்திய நீர்மூழ்கி கப்பல் நுழைய முயற்சி செய்ததாக கூறி வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும், பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தில் இதுவும் ஒன்று எனவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு பதிலடி
முன்னதாக, புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமானப்படை பதிலடித் தாக்குதல் நடத்தியபோது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் அபிநந்தனை தவிர மற்றொருவரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்திய ஆதாரங்களை , இந்திய ராணுவம் வெளியிட்டு பாகிஸ்தான் முகத்தில் கரியை பூசியது நினைவிற்குரியது.
-
காபி பேஸ்ட் பாகிஸ்தான்.. அமெரிக்கா சொன்னதை அப்படியே திரும்ப சொன்ன ஷெரீப்? வெடித்த சர்ச்சை -
நாளை மறுநாள் முக்கியமான மீட்டிங்! களத்தில் அமெரிக்க அதிகாரிகள்! வளைகுடா எதிர்காலமே இதில்தான் இருக்கு -
ஈரானில் விழுந்த அமெரிக்க விமானி! இதய துடிப்பை வைத்து பிடித்த US.. CIAன் 'கோஸ்ட் மெர்மெர்' வேட்டை -
பாகிஸ்தானில் ‘லாக்டவுன்' அறிவிப்பு.. ஈரான் வைத்த பெரிய ஆப்பு.. பதறும் மக்கள் -
"உங்க நாடு சுக்கு நூறாக சிதறும்.." வாயை விட்ட பாகிஸ்தானுக்கு அவர்கள் மொழியிலேயே ராஜ்நாத் சிங் பதிலடி -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன்












Click it and Unblock the Notifications