நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் இன்று முதல் இயக்கம்.. சென்னை உள்பட 30 ரயில்கள் விவரம்
டெல்லி: நாடு முழுவதும் 15 நகரங்களுககு இன்று முதல் முதற்கட்டமாக இயக்கப்பட உள்ள 30 ரயில்களின் விவரம் வெளியாகி உள்ளது.
சென்னை, பெங்களூரு, செகந்திராபாத் (ஹைதராபாத்), அகர்தலா, மும்பை, பாட்னா, புவனேஸ்வர், திருவனந்தபுரம், அகமதாபாத், ஜம்மு தாவி, திப்ரகார்க், அகர்தலா, ஹவுரா (கொல்கத்தா), பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, மடகோன் (கோவா) உள்பட 15 நகரங்களுக்கு ரயில் சேவைகள் டெல்லியில் இருந்து இன்று (மே 12ம் தேதி முதல்) இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேற்கண்ட நகரங்களில் இருந்தும் டெல்லிக்கு ரயில்கள்இயக்கப்பட உள்ளது. இவை அனைத்தும் சிறப்பு ரயில்களாக அறிவித்து பட்டியல்களை வெளியிட்டுள்ளது.

இந்த ரயில்கள் எல்லாம் வழங்கமாக நின்று செல்லும் ரயில் நிலையங்களில் எல்லாம் நின்று செல்லாது. சிறப்பு ரயில்கள் அனைத்தும் சில இடங்களில் மட்டுமே நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து சென்னைக்கு வெள்ளி ஞாயிறு கிழமைகளில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதேபோல் சென்னையிலிருந்து டெல்லிக்கு புதன், வெள்ளி கிழமைகளில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
திருவனந்தபுரத்திற்கும் டெல்லியில் இருந்து ரயில்கள் இயக்கப்பட உள்ளது. ஆனால் அந்த ரயில்கள் மங்களூரு வழியாக கேரளாவிற்கு செல்ல உள்ளதாக தமிழகத்திற்கு அவை எதுவும் இப்போதைக்கு வராது.

ரயில் டிக்கெட் முன்பதிவு நேற்று இரவு நடந்தது. சுமார் 54000 டிக்கெட்டுக்ள் விற்று தீர்ந்தன. இந்த ரயில்களில் ஏறுவதற்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட் (கான்பார்ம் டிக்கெட்) வைத்துள்ளவர்களை மட்டுமே ரயில் நிலையங்களுக்கு அனுமதிக்க உள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. ரயிலில் ஏறும் முன்பு பயணிகள் அனைவருக்கும் ஸ்கிரீன் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. கொரோனா அறிகுறி அற்ற பயணிகள் மட்டுமே ரயிலில் செல்ல அனுமதிக்கப்பட உள்ளார்கள். ரயில் பயணிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications