Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாற்றம் காணும் விமான போக்குவரத்து.. ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே போட்ட சூப்பர் ஒப்பந்தம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய விமான போக்குவரத்து துறையை வலுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பாவின் ஏர்பஸ் விமான நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது.

உலகில் மிகப் பெரிய ரயில் போக்குவரத்தை கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்திய ரயில்வே நாளொன்றுக்கு சுமார் 13,169 பயணிகள் ரயில்களையும் 8,479 சரக்கு ரயில்களையும் இயக்குகிறது. இந்த ரயில்கள் மொத்தமாக நாடு முழுவதும் சுமார் 68,103 கி.மீ தொலைவுக்கு பயணிக்கின்றன. பயணிகளில் ரயில் ஒரு நாளைக்கு 23 கோடி பேரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கிறது. இவ்வளவு பெரிய பணியை மேற்கொள்ளும் ரயில்வே நிர்வாகம் தினம் தினம் தன்னை அப்டேட் செய்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Indian Railways ties up with Airbus to boost Indian aviation industry

அந்த வகையில்தான் நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை ரயில்வே துறை அறிவித்திருந்து. இதற்கு அமிர்த் பாரத் நிலையம் திட்டம் என்றும் பெயரிட்டிருந்தது. இந்த திட்டத்திற்காக ரூ.24,470 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டை பொறுத்த அளவில் 18 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட இருக்கிறது. அதேபோல மறுபுறம் இந்திய விமான போக்குவரத்து துறையை வலுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பாவின் ஏர்பஸ் விமான நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை போட்டிருக்கிறது.

தேசிய ரயில் மற்றும் போக்குவரத்து பல்கலைக்கழகத்தின் (கதி சக்தி) துணைவேந்தர் பேராசிரியர் மனோஜ் சவுத்ரி மற்றும் ஏர்பஸ் இந்தியா மற்றும் தெற்காசியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு. ரெமி மைலார்ட் ஆகியோர் இணைந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறுகையில், "இந்த பல்கலைக்கழகம், தீவிர தொழில்-கல்வி கூட்டாண்மைகளில் கவனம் செலுத்தும்.

அதன் அனைத்து படிப்புகளும் தொழில்துறையுடன் இணைந்து வடிவமைக்கப்பட இருக்கிறது. இதில் படிக்கும் மாணவர்கள் தொழில்துறைக்கு தயாராக இருப்பார்கள். போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளில் வேலைவாய்ப்பிற்காக அவர்கள் விண்ணப்பிக்கும் போது வேலை வாய்ப்புகள் எளிதாக கிடைத்துவிடும். ஏர்பஸ் உடனான இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்த இலக்கை அடைவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்" என்று கூறியுள்ளார்.

Indian Railways ties up with Airbus to boost Indian aviation industry

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் சுமார் 15,000 மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார். எர்பஸ் நிறுவனம் உலகின் சிறந்த விமான போக்குவரத்து நிறுவுனமாகும். சர்வதேச அளவில் இரண்டு பெரும் விமான நிலையங்களில் இதுதான். ஒன்று போயிங், மற்றொன்று ஏர்பஸ். இந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த நிறுவனத்துடன் ஏற்கெனவே இந்தியா ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

அதாவது, ஏர்பஸ் மற்றும் டாடா சமீபத்தில் இந்திய விமானப்படைக்கான C295 விமானத்தை இந்தியாவில் வடிவமைக்கவும், புதுமைப்படுத்தவும், தயாரிக்கவும், மற்றும் மேம்படுத்தவும் கூட்டாக இணைந்து செயல்படுவதாக ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+