Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நூலிழையில் தப்பிய டெல்லி டூ பாட்னா விமானம்.. பைலட்டின் சாதுர்யத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இருந்து பீகாருக்கு 173 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் நூலிழையில் விபத்தில் இருந்து தப்பியுள்ளது. தரையிறங்கும் போது ஓடுபாதைக்கு முன்பே விமானம் கீழே இறங்கியது. கடைசி நேரத்தில் இதை கவனித்த விமானி சாதுர்யமாக செயல்பட்டு மீண்டும் விமானத்தை டேக் ஆஃப் செய்தார். இதனால் மீண்டும் வானில் வட்டமடித்த விமானம் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து வந்த தகவலை அடுத்து பத்திரமாக தரையிறங்கியது.

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் புறப்பட்ட சில வினாடிகளில் விபத்தில் சிக்கியது. விமானத்தின் என்ஜினுக்கு எரிபொருள் சப்ளை செய்யும் ஸ்விட்ச் தடை பட்டதே விபத்திற்கு காரணம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமான விபத்து சம்பவம் நாட்டையே உலுக்கியது.

indigo-plane-escapes-potential-incident-while-landing-in-patna

நூலிழையில் தப்பிய விமானம்

விமான விபத்துக்கு பிறகு அனைத்து விமானங்களிலும் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சமீப காலமாக விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்படுவது பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த நிலையில்தான் பாட்னா விமான நிலையத்தில் நேற்று அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று நடைபெற்றது. விமானியின் சாதுர்யத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.

டக்கென சுதாரித்த விமானிகள்

டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவிற்கு நேற்று இரவு இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான (6E 2482) விமானம் வருகை தந்தது. விமானம் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் நிர்ணயிக்கப்பட்ட தளத்துக்கு முன்னரே விமானத்தை விமானிகள் தரையிறக்கினர். விமானத்தை நிறுத்துவதற்கான போதிய இடம் இந்த இடத்தில் இருக்காது என்பதை உணர்ந்த விமானிகள், சட்டென சுதாரித்து விமானத்தை டேக் ஆஃப் செய்தனர்.

மீண்டும் வானில் பறந்தது

விமானம் மீண்டும் வானில் பறந்து வானில் வட்டமடித்தது. உரிய நேரத்தில் விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கு அனுமதி கிடைத்தததால் விமானம் இரவு 9 மணியளவில் லேண்டிங் ஆனது. விமானத்தில் பயணம் செய்த 173 பயணிகளும் பத்திரமாக கீழே இறங்கினர். விமானியின் சாதுர்யமான செயல்பாட்டால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறுகிய ஓடுபாதை

பாட்னாவில் உள்ள விமான நிலையம் மிகவும் குறுகிய ரன்வேயை கொண்டது ஆகும். எனவே இந்த விமான நிலையத்தில் லேண்டிங் செய்வது கொஞ்சம் சவாலான பணி என்று சொல்லப்படுகிறது. விமானத்தின் வேகத்தை துல்லியமான அளவுக்கு கொண்டு வந்து தரையிறக்க வேண்டியிருக்கும் என்று சொல்லப்படுகிறது. விமான நிலைய ஓடுபாதையை நீளமாக்கும் பணிக்காக அருகில் உள்ள இடங்களை கையகப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது.

கடிகார கோபுரம்

விமான நிலையத்திற்கு அருகிலேயே பாட்னாவில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்துள்ளன. தலைமை செயலகத்தின் கிளாக் டவர் உள்ளது. கடிகார கோபுரம் காரணமாக விமானத்தை 3.25 டூ 3.5 டிகிரி செங்குத்தான கோணத்தில் விமானத்தை தரையிறக்க வேண்டியுள்ளதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.

இதனால், லேண்டிங் செய்வது என்பது கொஞ்சம் அதிக ரிஸ்க் ஆன ஒன்றாக இந்த பாட்னா ஜெய் பிரகாஷ் நாராயண சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் ஒன்று என சொல்கிறார்கள். குறிப்பாக பனிமூட்டம் மற்றும் சவாலான கால நிலைகளின் போது இந்த பணி கொஞ்சம் கடினமானது என்று தெரிவித்தனர். எனவே, இந்த பாரம்பரிய டவர் கிளாக்கை 17.5 மீட்டர் உயரம் குறைக்கும் திட்டத்தை விமான நிலைய அதிகாரிகள் முன்மொழிந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+