அடடே.. எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்கள் செய்த செயலை பாருங்க.. புதிய ஆண்டிலாவது அமைதி மலருமா?
டெல்லி: ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறுவதை பாகிஸ்தான் ராணுவம் தனது வாடிக்கையாக வைத்துள்ளது. சீனாவும் தனது பங்குக்கு இந்திய எல்லையை அபகரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.
Recommended Video
அருணாச்சல பிரதேச மாநில எல்லையை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தினர் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

லடாக் எல்லையில் மோதல்
கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே கடும் மோதல் மூண்டது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் கற்களால் தாக்கி கொண்டனர். இந்த பயங்கர மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்தனர்.

பலகட்ட பேச்சுவார்தை
இதனை தொடர்ந்து லடாக் எல்லையில் பெரும் பதற்றம் உண்டானது. இதன் பின்பு லடாக் எல்லையில் அமைதி திரும்ப இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதில் ஓரளவுக்குதான் பலன் கிடைத்தது. பதற்றமான பகுதிகளில் கூடுதலாக குவிக்கப்பட்டு இருந்த இரு நாடு படை வீரர்களும், அவர்களின் ராணுவ டாங்கிகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன. ஆனால் சர்ச்சைக்குரிய எல்லை பகுதியில் இருந்து முழுமையாக செல்ல சீனா அடம்பிடித்து வருகிறது.

அச்சுறுத்தல் கொடுக்கும் சீனா
இதுவரை 12-க்கும் மேற்பட்ட பேச்சுவார்தை நடத்திய போதிலும் இரு தரப்புக்கும் இடையே சுமுக நிலை எட்டப்படவில்லை. அருணாச்சல பிரதேச எல்லையில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கட்டுமான பணிகளை மேற்கொண்டு வரும் சீனா, இந்தியாவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுத்து வருகிறது. புத்தாண்டு 2022 பிறந்துள்ளது. இந்த நிலையில் இந்திய-சீன எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறி மகிழ்ச்சியுடன் புத்தாண்டு வாழ்த்துகளை பாரிமாறிக் கொண்டனர்.

இந்திய-சீன ராணுவ வீரர்கள் புத்தாண்டு வாழ்த்து
பதற்றமான சூழல் நிலவி வரும் லடாக் எல்லையின் ஹாட் ஸ்பிரிங்ஸ், டெம்சோக், நாதுலா மற்றும் கொங்ரா லா பகுதிகளில் இந்திய-சீன ராணுவ படையினர் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். சுஷுல் மோல்டோ மீட்டிங் பாயிண்ட், பும் லா, கேகே பாஸ், டிபிஓ பாட்டில்நெக், கொங்கலா, கொங்ராலா மற்றும் வாச்சா டாமாய் பகுதியிலும் இரு நாட்டின் வீரர்களும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

புது ஆண்டில் அமைதி மலருமா?
இதேபோல் இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலும் இரண்டு நாட்டின் ராணுவ வீரர்களும் இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை கூறிக்கொண்டனர். மெந்தர் ஹாட் ஸ்பிரிங்ஸ் கிராசிங் பாயிண்ட், பூஞ்ச் ராவ்லகோட் கிராசிங் பாயிண்ட், சகோட்டி உரி கிராசிங் பாயிண்ட், மற்றும் சில்லியானா தித்வால் கிராசிங் பாயின்ட் ஆகிய எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். இந்த 2022-ம் ஆண்டிலாவது இந்தியா-சீனா மற்றும் இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சினை ஓய்ந்து அமைதி மலர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications