நிறுவனங்களுக்கான திவால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.. நிர்மலா சீதாராமன்
டெல்லி: நிறுவனங்களுக்கான திவால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
Recommended Video
ரூ 20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதார தொகுப்பு குறித்து விரிவாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். கடந்த 4 தினங்களில் பல்வேறு துறைகளுக்கான திட்டங்களை வழங்கிய அவர் இன்று இறுதி அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் நிறுவனங்களுக்கான திவால் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். நிறுவனங்கள் திவாலாகும் சூழ்நிலை வந்தால் அதற்கான நடவடிக்கை ஓராண்டுக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
அது போல் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் முன்பு ரூ 1 லட்சம் வரை வசூல் செய்ய வேண்டி இருந்தால் மட்டுமே அவற்றை திவாலானதாக அறிவித்து வந்தோம்.
அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்படும்: நிர்மலா சீதாராமன் அதிரடி
தற்போது அந்த வரம்பை ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ளோம். எனவே சிறு குறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து ரூ 1 கோடி வரை வசூல் செய்ய வேண்டிய நிலை வந்தால் மட்டுமே திவாலானதாக அறிவிக்கப்படும். ஓராண்டுக்கு புதிதாக எந்த திவால் நடவடிக்கைகளும் செய்யப்படாது என்றார்.