முத்தலாக் செய்வது கிரிமினல் குற்றம்.. ஜாமீனில் வெளியே வரலாம்.. சட்டம் சொல்வது என்ன?
Recommended Video
டெல்லி: முத்தலாக் தடை சட்டம் ராஜ்யசபாவிலும் நிறைவேறியுள்ளது. எனவே, முத்தலாக் செய்வது கிரிமினல் குற்றமாக மாற்றப்பட்டுள்ளது. அதே நேரம், இது ஜாமீனில் வெளிவரும் குற்றச் செயல் என வரையறுக்கப்பட்டுள்ளது.
இருமுறை, மோடி அரசு, இந்த சட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்து முடியாத நிலையில், மூன்றாவது முயற்சியாக ராஜ்யசபாவில் நேற்று இந்த சட்டத்தை நிறைவேற்றிவிட்டது.
காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாதி மற்றும் ஒரு சில கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்தன. அதிமுக வெளிநடப்பு செய்தது, மறைமுகமாக, இந்த சட்டம் நிறைவேற ஆதரவு அளித்தது.

விப் உத்தரவு இல்லை
கடந்த வாரம் லோக்சபாவில் முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாலில் நேற்று 99 வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 84 வாக்குகளிலும் கிடைத்தன. எனவே, 15 வாக்குகள் வித்தியாசத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ், திரிணாமுல், திமுக, இடதுசாரி கட்சிகள், சமாஜ்வாதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பி.டி.பி, ஆர்.ஜே.டி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள், இந்த மசோதாவை எதிர்த்தன. காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் விப் உத்தரவு பிறப்பிக்காததால், அக்கட்சிகளை சேர்ந்த சில எம்.பி.க்கள் வாக்களிக்கும் போது சபையில் இல்லை. இதுவும் அரசுக்கு சாதகமாக மாறியது.

வக்கீல் கட்டணம்
எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் இந்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசுகையில், "அரசின் இந்த செயல்பாடு அரசியல் நோக்கம் கொண்டதாக உள்ளது. குற்றவியல் பிரிவு மற்றும் வேறு சில விதிமுறைகள் காரணமாக மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம். மற்றபடி பெண் விடுதலை கொள்கையில் காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை உள்ளது. முத்தலாக் சட்டம் சிறுபான்மையினர் தங்களுக்குள் சண்டையிட வழிவகுக்கும். கணவன்-மனைவி இருவரும் வக்கீல்களுக்கு கட்டணம் செலுத்தியே திவாலாகிவிடுவார்கள்" என்றார்.

வழக்குகள்
முன்னதாக, முத்தலாக் மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த, சட்டத் துறை, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அதிகரிதது வரும் தலாக் வழக்குகள் குறித்து அரசு கவலைப்படுகிறது. உச்சநீதிமன்ற தடைக்கு பிறகும், இப்படியான தலாக்குகள் குறையவில்லை. மக்கள் நேர்மறையான முன்முயற்சியை ஆதரிக்கிறார்கள். ஆனால், முஸ்லீம் பெண்களின் உரிமைகளை எதிர்க்கட்சிகள் மனதில் நிறுத்த வேண்டுமே தவிர, அரசியலால் உந்தப்பட்டு எதிர்க்க கூடாது என்று தெரிவித்தார். பல முஸ்லீம் நாடுகள் இதுபோன்ற உடனடி தலாக் நடைமுறையை தடை செய்துள்ளன என்றும், ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

மாற்றம்
தலாக் செய்வதை, ஒரு குற்றமாகக் கருதும் சட்டப் பிரிவு இந்த மசோதாவிலும் அப்படியே உள்ளது. சில கட்சிகள் இந்த மசோதாவை எதிர்த்த முக்கிய காரணங்களில் இதுவும் ஒன்றாகும் - ஆனால், ஜாமீனில் வெளி வரக்கூடிய குற்றமாக அது மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தோடு புதிய மசோதா நிறைவேறியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications