சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை பிப். 28 வரை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சர்வதேச பயனிகள் விமான போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் இறுதி வரை விமான போக்குவாத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இருப்பினும் சரக்கு சேவை விமானங்கள், வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை மீட்கும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. பின்னர் உள்ளூர் விமான சேவைகள் தொடங்கப்பட்டன. இருப்பினும் சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த தடை பிப்ரவரி 28-ந் தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications