ஜம்மா மசூதி என்ன பாக்.கிலா உள்ளது? பீம் ஆர்மி ஆசாத் வழக்கில் டெல்லி ஹைகோர்ட் சரமாரி கேள்வி!
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி கைதான சந்திரசேகர் ஆசாத் ஜாமீன் வழக்கில் டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடி கைதான சந்திரசேகர் ஆசாத் ஜாமீன் வழக்கில் டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர். சந்திரசேகர் ஆசாத்தை கைது செய்தது ஏன் என்று நீதிபதி சரமாரி கேள்விகளை அரசு தரப்பிடம் எழுப்பி உள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நடந்த போராட்டங்களை பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் தீவிரமாக நடத்தி வந்தார். டெல்லியில் ஜம்மா மசூதியில் கடந்த டிசம்பர் 21ம் தேதி இவர் போராட்டம் நடத்தினார்.
இந்த போராட்டம் அமைதியாக நடைபெற்ற நிலையிலும் போலீசார் இவரை கைது செய்தனர். அப்போதில் இருந்து சந்திரசேகர் ஆசாத், ஜாமீன் பெற முயன்று வருகிறார். இவர் ஜாமீன் மீதான வழக்கு இன்று டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

இன்று விசாரணை
இந்த வழக்கை டெல்லி ஹைகோர்ட் நீதிபதி காமினி லாவ் விசாரித்தார். அப்போது வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சரமாரி கேள்விகளை எழுப்பினார். சந்திரசேகர் ஆசாத்திற்கு எதிராக எப்ஐஆரில் என்ன இருக்கிறது என்று நீதிபதி முதலில் கேட்டார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரியாது என்று கூறுகிறார்கள். இதனால் நீதிபதி கோபம் அடைந்தார்.

சரமாரி கேள்வி
இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞர், சந்திரசேகர் ஆசாத் வன்முறையை தூண்ட பார்க்கிறார். அவரின் பேஸ்புக் போஸ்ட் எல்லாம் வன்முறையை தூண்டும் வண்ணம் இருக்கிறது என்று கூறினார். இதன்பின் சந்திரசேகர் ஆசாத்தின் பேஸ்புக் பக்கத்தை பார்த்த நீதிபதி காமினி, சந்திரசேகர் ஆசாத் அப்படி எதுவும் போஸ்ட் செய்யவில்லை.

மக்கள் தர்ணா
அவர் மக்களை தர்ணா செய்ய அழைத்துள்ளார். மக்களை இப்படி தர்ணா செய்ய அழைப்பதில் என்ன தவறு. போராட்டம் செய்தால் தவறா? போராட்டம் என்பது மக்களின் அடிப்படை உரிமை. அதை அரசு தடுக்க நினைக்க கூடாது. அதற்கு எதிராக கைது செய்ய கூடாது என்று கூறினார்.

டெல்லி போலீஸ்
இதன்பின் டெல்லியில் அப்போது ஜம்மா மசூதி அருகே 144 இருந்தது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார். இதனால் மீண்டும் கோபம் அடைந்த நீதிபதி, ஏன் எப்போதும் 144 போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் . அவசியம் இல்லாமல் 144 போடக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் சொன்னது நினைவில் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர்.

சந்திரசேகர் ஆசாத்
அதன்பின், சந்திரசேகர் ஆசாத் எங்கும் வன்முறையை தூண்டவில்லை. ஜம்மா மசூதி ஒன்றும் பாகிஸ்தான் கிடையாது. அங்கு போராட்டம் செய்யலாம். ஜம்மா மசூதி பாகிஸ்தானில் இருந்தால் கூட, அவர் விசா எடுத்துக் கொண்டு அங்கு சென்று போராட்டம் செய்யலாம். பாகிஸ்தானும் ஒரு காலத்தில் இந்தியாவில்தான் இருந்தது, என்று நீதிபதி குறிப்பிட்டார்.

என்ன ஆதாரம்
இதில் கூடுதல் ஆதாரங்களை சமர்ப்பிக்க அரசு தரப்பு கூடுதல் அவகாசம் கேட்டது. இதையடுத்து இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக கூறி நீதிபதிகள் தள்ளி வைத்தனர். சந்திரசேகர் ஆசாத் தற்போது மோசமான உடல்நிலையில் அவதிப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications