தனி விண்வெளி மையம்.. இஸ்ரோ கலக்கல் அறிவிப்பு
டெல்லி: விண்வெளியில் இந்தியாவுக்கென தனி விண்வெளி மையம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
நிலவை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-1 விண்கலம் கடந்த 2008-ம் ஆண்டு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் நிலவின் தரைபகுதியிலிருந்து, 100 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்தது. இந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது.
இதனைத் தொடர்ந்து, சந்திரயான்-2 செயற்கைக்கோள் வரும் ஜூலை15ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி - மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் செப்டம்பர் 6-ம் தேதி நிலவில் தரையிரங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ திட்டம்
இந்தநிலையில், எதிர்காலத்தில் இந்திய மேற்கொள்ள உள்ள விண்வெளி திட்டங்கள் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் திட்டம் மட்டுமின்றி ககன்யான், சூரிய ஆய்வு , வெள்ளி கிரக ஆய்வு ஆகியவற்றிலும் இஸ்ரோ ஈடுபட உள்ளது என்றார்.

2020 -க்குள் ககன்யான்
வருகிற 2020 ஆம் ஆண்டு சூரியனை ஆராயும் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்ற அவர், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வெள்ளி கிரகத்தை ஆராய விண்கலத்தை அனுப்பும் திட்டமும் உள்ளது என்றார். இதே போல 2022 ஆம் ஆண்டுக்குள் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.

தனி ஆய்வகம்
இந்த திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்ல உள்ள வீரர்கள் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் விண்வெளியில் இந்தியாவுக்கு என்று தனி ஆய்வகம் அமைக்கப்படும் எனவும் சிவன் தெரிவித்தார்.

ரூ.10,000 கோடி மதிப்பு
முன்னதாக பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங், இந்தியா வரும் 2022 ஆண்டு நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். 10,000 கோடி ரூபாய் செலவிலான ககன்யான் திட்டத்தின் படி, இரண்டு அல்லது மூன்று பேர் விண்வெளிக்கு திட்டமிடப்படுள்ளதாகவும், இதற்கான பணிகளை தேசிய ஆலோசனை குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications