Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் பூதாகரமாக கிளம்பும் ஹிண்டன்பர்க் சர்ச்சை! நாடாளுமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பங்கு சந்தையில் அதானி நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு அறிக்கை வெளிட்டது. இந்நிலையில் இதற்கு எதிராக செபி ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எனவே இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் விவாதங்கள் எழலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான 'ஹிண்டன்பர்க்' கடந்த ஆண்டு அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டிருந்தது. 413 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வறிக்கையில், அதானி குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டிருந்ததாக குற்றம்சாட்டியிருந்தது. முறைகேட்டில் ஈடுபட்ட காலகட்டத்தில் அதானி குழுமத்தின் பங்குகள் அபரிமிதமாக வளர்ந்தன என்றும், பங்கு மதிப்புகளை அதிகரிக்க போலி நிறுவனம் தொடங்கப்பட்டு, அந்நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளன எனவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.

Adani Hindenburg Congress

இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக அதானி குழுமத்தின் சொத்து மதிப்பை ஹிண்டன்பர்க் குறிப்பிட்டிருந்தது. அதாவது தற்போது அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.84 லட்சம் கோடி. இதில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்படும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.8.2 லட்சம் கோடி சொத்து சேர்ந்திருக்கிறது. மொத்த சொத்தில் இது முக்கால்வாசியாகும். இதுமட்டும் இல்லாமல் இந்த காலத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் சுமார் 819% வளர்ச்சியடைந்திருக்கின்றன. இதைத்தான் ஹிண்டன்பர்க் ஆதாரமாக குறிப்பிட்டிருக்கிறது.

இந்த முறைகேடுகள் காரணமாக அதானி சட்டவிரோதமாக ஒரு பெரும் நிறுவனமாக வளர்ச்சியடைந்திருக்கிறது என்றும், இதனால் மற்ற நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் அடித்து நொறுக்கப்பட்டிருக்கிறது என்றும் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை காரணமாக அதானியின் பங்குகள் வரலாறு காணாத அளவில் சரிந்தன. அதானி குழுமத்தில் முதலீடு செய்திருந்த சிறு குறு நிறுவனங்களும் இதனால் இழப்பை சந்தித்தன. இது பொருளாதார வளர்ச்சியில் அடிவாங்கியது.

இது பெரும் பஞ்சாயத்தாக வெடித்த நிலையில், தற்போது இது குறித்த விவாதங்கள் மீண்டும் எழுந்திருக்கின்றன. இதற்கு காரணம் செபிதான். செபி கடந்த 27ம் தேதி ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு ஷோ காஸ் நோட்டீஸை அனுப்பியிருந்தது. இதில், இந்திய அரசின் விதிகளை மீறியது குறித்து விளக்கம் அளிக்க கேட்டிருக்கிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிண்டன்பர்க், "இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த நபர்களால் நடத்தப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்துபவர்களை அமைதிப்படுத்தவும் மிரட்டவும் நடைபெறும் முயற்சி இது" என்று கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி பல்வேறு விஷயங்கள் குறித்து மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை அடுக்கியிருந்தார். இப்படி இருக்கையில் இன்று ஹிண்டன்பர்க் குறித்த விவாதங்கள் எழலாம் என்று சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+