இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகள் வரை ஆகும்.. ஏற்றுமதி செய்தது ஏன்? சீரம் விளக்கம்
டெல்லி: இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த 2 முதல் 3 ஆண்டுகள் வரை கூட ஆகலாம் என்றும் மூன்று மாதங்களில் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது இயலாத காரியம் என்றும் சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா பரவின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இருப்பினும், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தாண்டு தொடக்கத்தில் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதுதான் தட்டுபாடு ஏற்பட காரணம் என்றும் விமர்சித்து வருகின்றனர்.

மூன்று ஆண்டுகள் ஆகலாம்
இந்நிலையில், இது குறித்து சீரம் நிறுவனத்தின் சிஇஓ ஆதார் பூனவல்லா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இரண்டு, மூன்று மாதங்களில் இந்தியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது இயலாத காரியம். இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த 2 முதல் 3 ஆண்டுகள் வரை கூட ஆகலாம். கொரோனாவுக்கு எதிரான இந்தப் போரில், இப்போது நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

ஏற்றுமதி ஏன்
இந்தியாவில் முதலில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அப்போது நம்மிடம் போதியளவு தடுப்பூசிகள் இருந்தன. நாட்டில் கொரோனா பாதிப்பும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குறைவாகவே இருந்தது. அப்போது தடுப்பூசி பணிகள் இந்தியாவில் வெற்றிகரமாகத் தொடங்கி நடைபெற்று வந்தன. ஆனால், உலகின் பல்வேறு நாடுகளிலும் அப்போது வைரஸ் பரவல் அதிகமாக இருந்தது, தடுப்பூசிக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது.

எங்கு இருந்தாலும் நமக்கு ஆபத்து
அந்த சமயத்தில் உலக நாடுகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை இந்தியா செய்தது. மத்திய அரசு உலக நாடுகளுக்கு அளித்திருந்த உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் ஒரு போதும் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. கொரோனா வைரஸ் என்பது ஒரு நாட்டில் உள்ளவர்கள் மட்டும் வரும் என்றில்லை. உலகின் எந்த நாட்டில் வைரஸ் பாதிப்பு இருந்தாலும், நாம் அனைவருக்கும் ஆபத்துதான்.

அதிக தடுப்பூசிகள் டெலிவரி
சீரம் நிறுவனம் இதுவரை 20 கோடி தடுப்பூசிகளை டெலிவரி செய்துள்ளது. அமெரிக்காவில் தடுப்பூசி பணிகள் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகே இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பினும், அதிக அளவிலான தடுப்பூசிகளை நாங்கள் டெலிவரி செய்துள்ளோம். சர்வதேச அளவில் பார்த்தால் அதிக தடுப்பூசிகளை டெலிவரி செய்த நாடுகளில் நிச்சயம் இந்தியா முதல் மூன்று இடங்களில் இருக்கும்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications