சாலைகளில் காற்று சுத்திகரிப்பான்கள்.. கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்! காரணம் இதுதான்
டெல்லி: ராஜஸ்தானில் காற்று மாசு அதிகரித்திருக்கும் நிலையில், அதை கட்டுப்படுத்த காற்று சுத்திகரிப்பான்கள் சாலைகளில் வைக்கப்பட்டிருக்கின்றன. இது காற்றை சுத்தம் செய்யும் என்றாலும் கூட, நெட்டிசன்கள் இதை கடுமையாக கலாய்த்து தள்ளியிருக்கிறார்கள்.
ஜெய்ப்பூரில், ஜவஹர் சர்க்கிள் மற்றும் டோங்க் சாலை போன்ற அதிக போக்குவரத்து உள்ள பகுதிகளில் இந்த ராட்சத காற்று சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. "PAMARES" பாணியிலான 4 யூனிட்கள், ஒவ்வொன்றும் 8 மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டு, சுற்றியுள்ள காற்றை வடிகட்டும் பணியைச் செய்கின்றன.

அதிகாரிகள் கூற்றுப்படி, ஒவ்வொரு சுத்திகரிப்பானும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மில்லியன் கன மீட்டர் காற்றை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. நவம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளுக்கு இடையில் இரவோடு இரவாக நிறுவும் பணிகள் நடைபெற்றன. நவ.15 முதல் இது செயல்பட தொடங்கியுள்ளன. இந்த நடவடிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. ராம்பாக் தெருவில் ஒரு கூண்டு போன்ற அமைப்பிற்குள் வைக்கப்பட்டிருந்த பெரிய சுத்திகரிப்பான் குறித்த வீடியோ 'X' தளத்தில் வைரலானது. இந்த ஐடியா நிஜமாவே பலன் கொடுக்குமா அல்லது சும்மா எதையாவது வைக்க வேண்டும் என்று வைத்திருக்கிறார்களா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒரு x பயனர், "சாலைகளில் காற்று சுத்திகரிப்பான்களா? சட்டசபைகளிலும் மூளை சுத்திகரிப்பான்களை நிறுவுங்கள்" என்று கருத்து தெரிவித்திருக்கிறார். மற்றொருவர், "இது முட்டாள்தனமான யோசனை" என்று கூறியுள்ளார். இன்னொரு பயனர், "இது பயனற்ற யோசனை, எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்று எனக்கு தோன்றவில்லை. முடிந்தவரை மரங்களை நடுவதே நல்லது, அவை இயற்கையான சுத்திகரிப்பான்களாக செயல்படும்." மற்றொருவர், இது சூரியனில் எரியும் தீயை, அணைக்க தீயணைப்பு வாகனத்தை பயன்படுத்துவதை போல் உள்ளது" என்றும் விமர்சித்துள்ளார்.
இந்த விமர்சனங்களுக்கு நியாயமான காரணங்கள் இருக்கின்றன. சுத்திகரிப்பான் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தைச் சுற்றியுள்ள குறுகிய பகுதியில் உள்ள காற்றை உடனடியாகச் சுத்தம் செய்ய இவை உதவும். குறிப்பாக 4 முனை சந்திப்புகள், சிக்னல்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்கள் போன்ற இடங்களில் வாகனங்கள் நின்று இயங்கும்போதும், புறப்படும்போதும் ஏற்படும் புகை மாசுபாட்டைக் குறைக்க இது உதவும். இவை PM10, PM2.5 போன்ற தீங்கு விளைவிக்கும் நுண்துகள்களை வடிகட்ட வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் ஒரு காற்று சுத்திகரிப்பான் அது வைக்கப்பட்ட இடத்திலிருந்து சில நூறு மீட்டர் தூரத்திற்குள் மட்டுமே காற்றைச் சுத்தப்படுத்த முடியும். முழு நகரம் அல்லது பெரிய சுற்றுவட்டச் சாலையின் மொத்தப் பரப்பளவைச் சுத்தப்படுத்த ஆயிரக்கணக்கான சுத்திகரிப்பான்கள் தேவைப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications