ஜஸ்ட் மிஸ்.. மாட்டிய மைத்துனன்.. தப்பி ஓடிய மசூத் அசார்.. 3 அடுக்கு பாதுகாப்புடன் பதுங்கல்!
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவனும், நீண்ட நாட்களாக இந்தியா தேடி வரும் தீவிரவாதியுமான மசூத் அசார் பாகிஸ்தானில் பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Recommended Video

டெல்லி: ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவனும், நீண்ட நாட்களாக இந்தியா தேடி வரும் தீவிரவாதியுமான மசூத் அசார் பாகிஸ்தானில் பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நிறைய பாகிஸ்தான் ஊடகங்களே இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது.
காஸ்மீரில் உள்ள புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் தாக்குதல் நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் பொறுப்பேற்றுக்கொண்டான். இதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்தியா இன்று பாகிஸ்தானில் மிக கடுமையான விமானப்படை தாக்குதலை நடத்தி இருக்கிறது.

கொல்லப்பட்டான்
இந்தியா இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் மசூத் அசாரின் மைத்துனன் யூசுப் அசார் கொலை செய்யப்பட்டான். அதேபோல் மசூத் அசாரின் நெருக்கமான உறவினர்கள் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் சிலர் மசூத் அசாரின் ரத்த பந்தங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதுவும் ஆகவில்லை
ஆனால் இந்த தாக்குதலில் மசூத் அசாருக்கு எதுவும் ஆகவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட எந்த தீவிரவாத முகாமிலும் மசூத் அசார் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. மசூத் அசார் மிகவும் பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருக்கிறான் என்றும் கூறுகிறார்கள்.

அதே முறை
பாகிஸ்தானின் அபோதாபாத்தில்தான் அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்தான். அவன் அங்கு பெரிய சுவர்கள் சுற்றப்பட்ட, பெரிய வீட்டிற்குள் பங்கருக்குள் பதுங்கி இருந்தான். அதேபோல்தான் தற்போது மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான் என்று புல்வாமா தாக்குதலின் போதே தகவல் வெளியானது.

எஸ்கேப் ஆனான்
இந்த நிலையில் மசூத் அசார் ரவல்பண்டியில் இருந்து வெளியேறி கோதங்கி என்ற பாகிஸ்தானின் உட்பகுதியில் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் எழுதி உள்ளது. நேற்று முதல்நாளே மசூத் அசார், அங்கு சென்று பதுங்கிவிட்டதாகவும். அங்கு நிறைய ஜெய்ஷ் இ முகமது குழுவின் முகாம்கள் இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

மூன்று அடுக்கு
இந்த நிலையில் முகமது அசாருக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய ராணுவம் அவரை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் இவ்வளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இன்னும் நீண்ட நாட்களுக்கு அவன் இப்படியே பதுங்கி இருப்பான் என்றும் கூறுகிறார்கள்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications