ஜஸ்ட் மிஸ்.. மாட்டிய மைத்துனன்.. தப்பி ஓடிய மசூத் அசார்.. 3 அடுக்கு பாதுகாப்புடன் பதுங்கல்!
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவனும், நீண்ட நாட்களாக இந்தியா தேடி வரும் தீவிரவாதியுமான மசூத் அசார் பாகிஸ்தானில் பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Recommended Video

டெல்லி: ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவனும், நீண்ட நாட்களாக இந்தியா தேடி வரும் தீவிரவாதியுமான மசூத் அசார் பாகிஸ்தானில் பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. நிறைய பாகிஸ்தான் ஊடகங்களே இது தொடர்பான செய்திகளை வெளியிட்டுள்ளது.
காஸ்மீரில் உள்ள புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்புதான் தாக்குதல் நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்திற்கு ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார் பொறுப்பேற்றுக்கொண்டான். இதற்கு பழிவாங்கும் விதமாகவே இந்தியா இன்று பாகிஸ்தானில் மிக கடுமையான விமானப்படை தாக்குதலை நடத்தி இருக்கிறது.

கொல்லப்பட்டான்
இந்தியா இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் மசூத் அசாரின் மைத்துனன் யூசுப் அசார் கொலை செய்யப்பட்டான். அதேபோல் மசூத் அசாரின் நெருக்கமான உறவினர்கள் பலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் சிலர் மசூத் அசாரின் ரத்த பந்தங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதுவும் ஆகவில்லை
ஆனால் இந்த தாக்குதலில் மசூத் அசாருக்கு எதுவும் ஆகவில்லை. தாக்குதல் நடத்தப்பட்ட எந்த தீவிரவாத முகாமிலும் மசூத் அசார் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. மசூத் அசார் மிகவும் பாதுகாப்பான இடத்தில் பதுங்கி இருக்கிறான் என்றும் கூறுகிறார்கள்.

அதே முறை
பாகிஸ்தானின் அபோதாபாத்தில்தான் அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கி இருந்தான். அவன் அங்கு பெரிய சுவர்கள் சுற்றப்பட்ட, பெரிய வீட்டிற்குள் பங்கருக்குள் பதுங்கி இருந்தான். அதேபோல்தான் தற்போது மசூத் அசார் பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறான் என்று புல்வாமா தாக்குதலின் போதே தகவல் வெளியானது.

எஸ்கேப் ஆனான்
இந்த நிலையில் மசூத் அசார் ரவல்பண்டியில் இருந்து வெளியேறி கோதங்கி என்ற பாகிஸ்தானின் உட்பகுதியில் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் எழுதி உள்ளது. நேற்று முதல்நாளே மசூத் அசார், அங்கு சென்று பதுங்கிவிட்டதாகவும். அங்கு நிறைய ஜெய்ஷ் இ முகமது குழுவின் முகாம்கள் இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது.

மூன்று அடுக்கு
இந்த நிலையில் முகமது அசாருக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்திய ராணுவம் அவரை எப்போது வேண்டுமானாலும் தாக்கலாம் என்பதால் இவ்வளவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இன்னும் நீண்ட நாட்களுக்கு அவன் இப்படியே பதுங்கி இருப்பான் என்றும் கூறுகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications