ஜெய்சங்கர்.. அப்பவே வெளியுறவு கொள்கையில் 'கறார்' ... இப்ப மத்திய அமைச்சர்... அண்டை நாடுகள் 'வெலவெல'
Recommended Video
டெல்லி: வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்த காலத்தில் இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கியதில் கடும் கண்டிப்பை காட்டிய ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை அமைச்சராகி இருக்கிறார். இதனால் வாலாட்ட நினைக்கும் அண்டை நாடுகள் வெலவெலத்துப் போகும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்திய வெளியுறவுத் துறையில் தொடக்க காலத்தில் ஜி. பார்த்தசாரதியின் சிஷ்யராக இருந்தவர் ஜெய்சங்கர். 1980களில் தாரப்பூர் அணு மின்நிலையங்களுக்கான எரிபொருள் தொடர்பான அமெரிக்கா விவகாரங்களை திறம்பட கையாண்டவர்.
அதேபோல் 1988-90ம் ஆண்டு காலத்தில் இலங்கைக்கான இந்திய தூதரகத்தில் முதன்மை செயலராக பணிபுரிந்தார் ஜெய்சங்கர். அப்போதுதான் இந்திய அமைதிப்படை இலங்கையில் புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபட்டிருந்த காலம். இவர்தான் அமைதிப்படையின் அரசியல் ஆலோசகராகவும் இருந்தார்.

மோடியின் இதயத்தில் இடம்
குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது நடத்தப்பட்ட இனப்படுகொலைகளைத் தொடர்ந்து அவருக்கு விசாவை அமெரிக்கா வழங்க மறுத்தது. 2014-ல் மோடி பிரதமரான போது அமெரிக்காவுடன் போராடி மோடிக்கு விசாவை பெற்றுக் கொடுத்தவர் ஜெய்சங்கர். அப்போது முதலே மோடியின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டார் ஜெய்சங்கர்.

யு.எஸ்.- இந்தியா ஒப்பந்தம்
2004-2007-ம் ஆண்டில் வெளியுறவுத் துறையில் அமெரிக்கா விவகாரங்களை கவனித்து வந்தார் ஜெய்சங்கர். அவரது காலத்தில்தான் இந்தியா- அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. 2013-ம் ஆண்டு இந்திய வெளியுறவுத்துறை செயலர் பதவிக்கு ஜெய்சங்கர் பெயர் அடிபட்டது. ஆனால் சீனா, சிங்கப்பூர் நாடுகளுக்கான தூதரானார் ஜெய்சங்கர்.

ஊடுருவிய சீனாவுக்கு பதிலடி
சீனாவுக்கான இந்திய தூதராகப் பணியாற்றிய காலத்தில் இருநாடுகளின் உறவு மேம்படுவதற்கு முயற்சிகளை மேற்கொணார் ஜெய்சங்கர். குறிப்பாக 2013-ம் ஆண்டு லடாக்கில் சீனா ஊடுருவலை மேற்கொண்டது. அதே காலத்தில் சீனா அதிபர் இந்தியாவுக்கு வருகை தர இருந்தார். லடாக்கில் இருந்து சீனா படைகள் வெளியேறினால்தான் சீனா அதிபர் இந்தியாவுக்கு வர முடியும் என மிரட்டல் விடுத்து பணியவைத்தார் ஜெய்சங்கர்.

நேபாளத்தை நடுங்கவைத்தவர்
2015-ம் ஆண்டு மோடி ஆட்சிக் காலத்தில் வெளியுறவுத் துறை செயலராக அவருக்கு பதவி உயர்வு கிடைத்தது. சீனாவுக்கு இடம் கொடுத்திருந்த நேபாளம், பெருவெள்ளத்தில் சிக்கிய போது ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவின் பக்கம் திருப்பியதில் ஜெய்சங்கரின் பணி முக்கியமானது.

அண்டை நாடுகள் அச்சம்
தற்போது மோடி அரசில் ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை அமைச்சராகவே நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை சுமார் 40 ஆண்டுகாலமாக கையாண்ட அனுபவமிக்கவர் என்பதால் நமக்கு இணங்கிவராத நம்மை சார்ந்திருக்கும் அண்டை நாடுகள் அச்சம் கொள்ளவே செய்யும் என்பது அரசியல் பார்வையாலர்கள் கருத்து.

இந்தியாவின் பிடிமானம்
தற்போதைய நிலையில் இலங்கை, மாலத்தீவுகள், நேபாளம் ஆகியவை சீனா பக்கம் சாய்ந்து நிற்கின்றன. குறிப்பாக இலங்கையும் மாலத்தீவும் முழுமையாக சீனாவின் காலனி நாடுகளாகிவிட்டன. இந்த நாடுகளில் இந்தியாவுக்கு இருந்த பிடிமானம் தளர்ந்து போய்விட்டது. இழந்த பிடிப்பை ஜெய்சங்கர் மீட்டுக் கொடுப்பார் என்பதும் பெரும் எதிர்பார்ப்பாகும். அதேபோல் என்னதான் நம்மை சார்ந்த தேசமாக இருந்தாலும் பூடானிலும் சீனா ஆதரவு போக்கு தலைதூக்குகிறது. இதை கட்டுப்படுத்தி முழுமையாக இந்தியா சார்ந்த ஒருநாடாக பூடானை கொண்டு வரும் பெரும் பொறுப்பும் ஜெய்சங்கருக்கு இருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications