இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு.. மாநில அந்தஸ்தை இழந்தது ஜம்மு- காஷ்மீர்
Recommended Video
டெல்லி: இரு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்படுவதால் மாநில அந்தஸ்தை இழந்துள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் அண்மைகாலமாக சில விசித்திரமான சம்பவங்கள் நடந்து வருவதை அப்பகுதி மக்களும் அரசியல்வாதிகளும் உணர்ந்து வந்தனர். இந்த நிலையில் ஏராளமான ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். நேற்று நள்ளிரவு முதல் மெஹபூபா முஃப்தியும் ஒமர் அப்துல்லாவும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

நாடாளுமன்றம்
இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

ஒப்புதல்
காஷ்மீரில் இத்தனை ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த 370 சட்டப்பிரிவு தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது. இதற்கான அரசாணை குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டது.

மாநில அந்தஸ்து
இதையடுத்து ஜம்மு- காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜம்மு- காஷ்மீர், லடாக் ஆகியவை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் ஜம்மு- காஷ்மீர் மாநில அந்தஸ்தை இழந்துவிட்டது.

அமளி
இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவி வருகிறது. 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications