டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹிட்லர் ஆட்சியில் நடந்ததுதான் இப்போது இந்தியாவில் நடக்கிறது.. எச்சரிக்கும் நோபல் வெற்றியாளர் அபிஜித்

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் நடந்ததை போன்ற சம்பவங்கள் தற்போது இந்தியாவில் நடக்க தொடங்கி உள்ளது என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி எச்சரித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    3 premier universities affected by police and masked men

    டெல்லி: ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் நடந்ததை போன்ற சம்பவங்கள் தற்போது இந்தியாவில் நடக்க தொடங்கி உள்ளது என்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி எச்சரித்துள்ளார்.

    இந்தியாவின் முக்கியமான பல்கலைக்கழகமான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நேற்று மாணவர்கள் மீது முகமூடி அணிந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது. முகமூடி அணிந்த கும்பல் நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தை நிகழ்த்தினார்கள்.

    இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அபிஜித் பானர்ஜி முன்னாள் ஜேஎன்யூ மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் 26/11 தீவிரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது.. உத்தவ் தாக்கரே ஆவேசம் ஜேஎன்யு மாணவர்கள் மீதான தாக்குதல் 26/11 தீவிரவாத தாக்குதலை நினைவூட்டுகிறது.. உத்தவ் தாக்கரே ஆவேசம்

    என்ன பேட்டி

    என்ன பேட்டி

    அபிஜித் பானர்ஜி இது தொடர்பாக அளித்துள்ள பேட்டியில், நான் படித்த ஜேஎன்யூவில் இப்போது நடந்து வரும் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. மிகுந்த கவலை அளிக்கிறது. அரசு இது தொடர்பாக விசாரிக்க வேண்டும். அங்கு என்ன நடந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து உண்மையை கொண்டு வர வேண்டும்.

    குரலை கேட்க வேண்டும்

    குரலை கேட்க வேண்டும்

    மொத்தமாக எல்லோரின் குரலையும் கேட்க வேண்டும். யாருடைய குரலையும் மதிக்காமல் இருக்க கூடாது. இந்தியாவின் மதிப்பு சரிந்து கொண்டு இருக்கிறது. இந்தியாவின் மதிப்பை காக்க நினைத்தால் அரசு உடனடியாக செயல்பட வேண்டும்.

    ஹிட்லர் ஆட்சி

    ஹிட்லர் ஆட்சி

    ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின் போது நடந்ததுதான் இப்போது இந்தியாவில் நடக்கிறது. அங்கு நாஜி ஆட்சியில் வந்த மாற்றங்கள், சட்டங்கள் இன்று இந்தியாவில் வர தொடங்கி உள்ளது. அதை நாம் அனுமதிக்க கூடாது.

    போராடிய அரசு

    போராடிய அரசு

    1983ல் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போராடியதற்காக என் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. கொலை முயற்சி வழக்கும் பதியப்பட்டது. நான் அப்போது 10 நாட்கள் திகார் சிறையில் இருந்தேன். நல்லவேளை அந்த வழக்கு பின் திருப்பி பெறப்பட்டது, அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    English summary
    JNU Attack: India movie towards Nazi Germany says Noble Winner Abhijith Banerjee.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X