சிறந்த ஆளுமைகளே நீங்க செஞ்சது... தீபிகா படுகோனே மீது ஜேஎன்யு பல்கலை துணைவேந்தர் கடும் அதிருப்தி
Recommended Video
டெல்லி: போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவின் செயலால் ஜேன்யு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் சரமாரி கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மர்ம கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்கள், நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, சோனம் கபூர், மற்றும் அணுராக் காஷ்யப் பங்கேற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது
நாளை (வெள்ளிக்கிழமை) தீபிகா படுகேனே நடித்த சாபாக் திரைப்படம் ரிலீஸ் ஆவதால் விளம்பரத்திற்காக வந்துள்ளதாக மாணவர்களின் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பாஜக அமைப்பினர் அவர் மீது குற்றம்சாட்டுகிறார்கள்.
இந்நிலையில் டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், நேற்றைய போராட்டத்திற்கு வந்த திரை உலகினருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். "போராட்டக்காரர்களை ஆதரிக்க வந்த சிறந்த ஆளுமைகள் அனைவரையும் நான் கேட்க விரும்புகிறேன், ஆராய்ச்சி மற்றும் கற்பித்தல் செய்வதற்கான உரிமைகளை இழந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன? அவர்களுடன் நீங்கள் ஏன் நிற்க முடியாது," என்று அவர் கேள்வி கேட்டுள்ளார்.
இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி கவலைக்கிடம்.. ஹிமாச்சலில் சோகம்
இப்படி துணை வேந்தர் கேள்வி எழுப்ப காரணம், ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய தீபிகா படுகோனே. , நம்முடைய உணர்வை வெளிப்படுத்த பயப்படவில்லை என்பதற்காக நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன், இது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் மிகவும் நல்லது என்றார். இதனாலேயே துணைவேந்தர் இக்கேள்வி எழுப்பி உள்ளார்.