கூட்டு முயற்சியே எந்த வெற்றிக்கும் வழி வகுக்கும்.. பிரதமர் அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி
டெல்லி: டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மோடி, கடந்த 5 ஆண்டுகள் தமக்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு அலுவலக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
மக்களவை தேர்தலில் பெரும் வெற்றி வாகை சூடிய மோடி, மீண்டும் பிரதமராக உள்ளார். இந்நிலையில் இன்று காலை பிரதமர் அலுவலகம் சென்ற மோடிக்கு அங்கிருந்த ஊழியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர்கள் மத்தியில் நன்றி உரை நிகழ்த்தினார் மோடி.

இதற்கு முன்னர் நீங்கள் அனைவரும் பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றியிருப்பீர்கள். ஆனால் உங்களுடன் கடந்த 5 ஆண்டுகள் பணியாற்றியது தான் எனது முதல் அனுபவம் என குறிப்பிட்டார். நிர்வாகத் திறமை கொண்ட தலைமையால் தான் சிறப்பான வெற்றிக்கு வழிகாட்ட முடியும்.
அதே போல கூட்டு முயற்சியே எந்த ஒரு வெற்றிக்கும் வழி வகுக்கும். அந்த வகையில் தேசியளவில் ஒரு பிரதமர் போற்றப்படுகிறார் என்றால், அதற்கு உங்கள் உழைப்பும் ஒரு காரணம் என குறிப்பிட்டார். நேரம், காலம் பார்க்காமல் நாட்டு நலன்களுக்காக தம்முடன் இணைந்து பணியாற்றியதற்காக நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதாக கூறினார்.
அரசின் பொறுப்புகளை உணர்ந்து பிரதமர் அலுவலக ஊழியர்களாகிய நீங்கள் கடமையை சிறப்பாக செய்தீர்கள். பல நேரங்களில் குடும்பத்தைக் கூட மறந்துவிட்டு கால நேரம் பார்க்காமல் பணியாற்றியுள்ளீர்கள். அந்த சமயங்களில் எல்லாம் உங்கள் தியாகத்தை புரிந்து கொண்ட உங்கள் குடும்பத்தினருக்கு நன்றி கூறுவது என் கடமை என்றார்.
மக்களவை தேர்தலில் நான் பெற்றுள்ள வரலாற்று வெற்றி நம்முடைய கூட்டுழைப்பால் சாத்தியமானது என்றார். கடந்த காலத்தை போலவே, அடுத்து வரும் 5 ஆண்டுகள் தம்முடன் இணைந்து சிறப்பாக பணியாற்ற தயாராகும்படி பிரதமர் அலுவலக ஊழியர்களை மோடி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பல அடுக்கு, கூட்டுத் தலைமை என்பதற்கே இதுவரை முக்கியத்துவம் அளித்து வந்துள்ளதாக மோடி கூறினார்.
நாளை மறுதினம் வாரணாசிக்கு செல்லும் மோடி, தம்மை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications