Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடியை ஜோதிமணி, சுதா உள்ளிட்ட பெண் எம்பிக்கள் சதியாம்! சபாநாயகர் நேரடி குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தாக்க முயன்றதாக, தமிழக காங்கிரஸ் பெண் எம்பிக்கள் ஜோதிமணி மற்றும் சுதா ஆகியோர் மீது ஓம் பிர்லா குற்றம்சாட்டியுள்ளார். ஓம் பிர்லாவின் கருத்தால் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானம், குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றாத நிலையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், பிரதமர் மோடியை தாக்க சதி நடந்ததாகவும், எனவேதான் மோடியை அவைக்கு வர வேண்டாம் என தான் கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாக விளக்கமளித்துள்ளார்.

Jothimani and Sudha Attempted to Attack PM

மக்களவையில் ராகுல் காந்தி, சீன விவகாரம், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை குறித்து கேள்விகளை எழுப்பியிருந்தது புயலை கிளப்பியிருந்தது. எப்படி இருந்தாலும் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்னர் மோடி உரையாற்ற வேண்டும். எனவே அவரது பேச்சுக்காக எதிர்க்கட்சி எம்பிக்கள் காத்திருந்தனர். ஆனால், அவர் உரையாற்றாமல் தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பெண் எம்பிக்கள் மீது மக்களவை சபாநாயகர் ஒம் பிர்லா குற்றம்சாட்டியுள்ளார். பெண் எம்பி என்று மட்டும்தான் சபாநாயகர் கூறியிருக்கிறார். ஆனால், பிரதமர் இருக்கையை முற்றுகையிட்டதில் தமிழக காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி மற்றும் சுதா ஆகியோர் இருந்திருக்கின்றனர். அப்படியெனில், இவர்கள் இருவரை குறி வைத்துதான் ஓம் பிர்லா பேசியிருக்கிறாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.

இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை இது குறித்து கூறுகையில், "தமிழ்நாடு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வி ஜோதிமணி, செல்வி சுதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரதமர் மோடி தாக்க திட்டமிட்டிருந்தார்கள் என்று உண்மைக்கு புறம்பாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம்சாட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டிக்கின்றேன். அவருக்கு எனது கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் அவைக்கு வந்து சீனா ஊடுருவல் மற்றும் அமெரிக்காவின் நிபந்தனைக்கு பணிந்தது குறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்கட்சிகள் கூறிய நிலையில், இன்று அவர் அவைக்கு வரவில்லை.

அதற்கு சபாநாயகர் மேற்கண்டவாறு விளக்கமளித்திருக்கார். நடுநிலையுடன் செயல்பட வேண்டிய சபாநாயகர் அவதூறாக பேசுவது அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல. அகிம்சையே காங்கிரஸ் பேரியக்கத்தின் கொள்கை. எனவே, அவர் கூறிய அபாண்டமான குற்றச்சாட்டை திரும்ப பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+