75 லட்சம் பேர் மகிழ்ச்சி.. பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் 50000 ரூபாய்.. யாருக்கு எல்லாம் கிடைக்கும்
டெல்லி: கொரோனா கால பாதிப்பைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு ஜூன் மாதம், நாடு முழுவதும் நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில், 'பிரதம மந்திரி நடைபாதை வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டம்' (பிரதமர் ஸ்வநிதி) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டப்படி,75 லட்சம் நடைபாதை வியாபாரிகளுக்கு பிணையின்றி ரூ.17 ஆயிரத்து 800 கோடி கடன் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.
2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டு ஜூன் மாதம், நாடு முழுவதும் நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு புதிய திட்டத்தை அறிவித்தது. இதன்படி 'பிரதம மந்திரி நடைபாதை வியாபாரிகள் தற்சார்பு நிதி திட்டம்' (பிரதமர் ஸ்வநிதி) என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன்கீழ், நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.15 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என மூன்றுவகையான கடன்கள், பிணையின்றி வழங்கப்படுகின்றன. இதற்கு வட்டி மானியம், கடன் உத்தரவாதம் ஆகியவை மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

கடனை வெற்றிகரமாக திருப்பிச் செலுத்தும் பயனாளிகள் ரூ.30 ஆயிரம்வரை வரம்பு கொண்ட யு.பி.ஐ.யுடன் இணைக்கப்பட்ட ரூபே கடன் அட்டைகள் பெற தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். இந்த திட்டம் தொடங்கப்பட்டு, இன்றுடன் (திங்கட்கிழமை) 6 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இதையொட்டி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம், இத்திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட கடன் விவரங்களை ஒரு அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: "'பிரதமர் ஸ்வநிதி திட்டத்தின் மூலம், நகர்ப்புற பகுதிகளில் 75 லட்சத்து 50 ஆயிரம் நடைபாதை வியாபாரிகள் பலன் அடைந்திருக்கிறார்கள். ரூ.17 ஆயிரத்து 800 கோடி மதிப்புள்ள மொத்தம் 1 கோடியே 12 லட்சம் பிணையில்லா கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
நடைபாதை வியாபாரிகள் 'கேஷ்பேக்' ஊக்கத்தொகை மற்றும் வட்டி மானியம் மூலம் ரூ.800 கோடி பெற்றுள்ளார்கள். சுமார் 95 சதவீத பயனாளிகள், வங்கிகளில் முதல்முறையாக கடன் பெற தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 30 சதவீதம் பேர், கூடுதல் கடன்கள் பெற்றிருக்கிறார்கள் இத்திட்டத்தால், பயனாளிகளின் வருமானம் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 20 சதவீதம் அதிகரித்து இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பயனாளிகளில் 46 சதவீதம்பேர் பெண்கள் ஆவர். 70 சதவீதம்பேர், நலிவடைந்த சமுதாயத்தினர்.இத்திட்டம், 2030-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது" இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிரதமர் ஸ்வநிதிக்கு ஏழை நடைபாதை வியாபாரிகள் எளிதாக விண்ணப்பிப்பது எப்படி. என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை பார்ப்போம்.
விண்ணப்பிக்க வெறும் 3 முக்கிய ஆவணங்கள் இருந்தால் போதும்:
ஆதார் அட்டை (Aadhaar Card): இதனுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் (ஏனெனில் ஓடிபி - OTP வரும்).
வாக்காளர் அடையாள அட்டை (Voter ID)
வங்கி கணக்கு புத்தகம் (Bank Passbook): கடனுதவித் தொகை நேரடியாக இந்த வங்கிக் கணக்கிற்குத்தான் வரும்.
கூடுதல் சான்று (ஏதாவது ஒன்று மட்டும்):
உள்ளாட்சி அமைப்பு (மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி) வழங்கிய நடைபாதை வியாபாரி அடையாள அட்டை அல்லது சான்றிதழ் .
ஒருவேளை இது இல்லை என்றால், உள்ளாட்சி அமைப்பிடம் ஆன்லைனில் பெறப்படும் பரிந்துரை கடிதம் போதும்.
ஏழை மக்கள் ஆன்லைனில் 3 வழிகளில் எளிதாக விண்ணப்பிக்கலாம்.
வழி 1: அருகில் உள்ள 'இ-சேவை' மையம் - மிக எளிதானது!
ஏழை சாலையோர வியாபாரிகள் தங்களுக்கு அருகில் உள்ள பொதுச் சேவை மையம் அல்லது அரசு இ-சேவை மையத்திற்கு மேலே சொன்ன ஆவணங்களை எடுத்துச் சென்றால் போதும். அங்குள்ள கணினி நடத்துநர்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்துத் தருவார்கள்.
வழி 2: வங்கி அல்லது சுயஉதவிக் குழுக்கள் மூலம்
தங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளைக்கு நேராகச் சென்று 'PM SVANidhi' படிவத்தைக் கேட்டுப் பெற்றுப் பூர்த்தி செய்து தரலாம். அல்லது தங்களுக்குப் பரிச்சயமான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
வழி 3: மொபைல் ஆப் (PM SVANidhi App) மூலம் தாங்களாகவே
இணைய வசதி மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தெரிந்த வியாபாரிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 'PM SVANidhi' அதிகாரப்பூர்வ செயலியைப் பதிவிறக்கம் செய்து, தங்களின் ஆதார் எண் மற்றும் ஓடிபி (OTP) மூலமாகவே 5 நிமிடங்களில் விண்ணப்பித்துவிடலாம்.
3. கடன் எப்படி கிடைக்கும்? (Loan Stages)
இந்தத் திட்டத்தின் சிறப்பம்சமே, கடனைச் சரியாகத் திருப்பிச் செலுத்தச் செலுத்த அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கடன் தொகை உயரும்:
முதல் முறை: ₹10,000 அல்லது ₹15,000 (பிணையில்லா கடன்)
இரண்டாம் முறை (முந்தையதை முடித்தால்): ₹25,000
மூன்றாம் முறை: ₹50,000 வரை உயரும்.
இதோடு, டிஜிட்டல் பரிவர்த்தனை (UPI/QR Code) செய்யும் வியாபாரிகளுக்கு மாதந்தோறும் 'கேஷ்பேக்' (Cashback) சலுகையும், 7% வட்டி மானியமும் நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் செலுத்தப்படும்.
அதேநேரம் பிரதமர் ஸ்வநிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க உள்ளாட்சி அமைப்புகள் வழங்கும் 'நடைபாதை வியாபாரி சான்றிதழ்' (Certificate of Vending) அல்லது பரிந்துரை கடிதம் (LoR) இல்லாமலும் வாங்க முடியும். எப்படி என்றால் ஒரு சாலையோர வியாபாரி ஏற்கனவே மத்திய அரசின் உதயம் (MSME) போர்ட்டலில் தன் கடையைப் பதிவு செய்து 'உதயம் பதிவுச் சான்றிதழ்' வைத்திருந்தால், அவர் தனியாக உள்ளாட்சி அமைப்பின் சான்றிதழுக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.
அந்த உதயம் சான்றிதழையே வணிகத்திற்கான அதிகாரப்பூர்வ ஆவணமாகப் பயன்படுத்தி, மிக எளிதாக ஸ்வநிதி கடனைப் பெற முடியும்.
'உதயம் அசிஸ்ட்' மூலம் கூடுதல் பலன்
மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 'உதயம் அசிஸ்ட்' திட்டத்தின்படி, பிரதமர் ஸ்வநிதி திட்டத்தில் கடன் பெறும் அனைத்து நடைபாதை வியாபாரிகளும் தானாகவே உதயம் தளத்திலும் இணைக்கப்படுகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்குக் கிடைக்கும் கூடுதல் பலன்கள் கிடைக்கும். சாலையோரக் கடையாக இருந்தாலும், அது மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் (MSME) அமைச்சகத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக மாறிவிடுகிறது.
அரசு முன்னுரிமைக் கடன் : வங்கிகள் இவர்களுக்குக் கடன் வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் ஸ்வநிதி கடனுக்குப் பிறகு, எதிர்காலத்தில் கடையைப் பெரிய அளவில் விரிவுபடுத்த வங்கிகளில் பெரிய தொகையைக் கடனாகப் பெற இந்த உதயம் பதிவு அஸ்திவாரமாக அமையும். மத்திய அரசின் இதர MSME நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் ஏதேனும் அறிவிக்கப்பட்டால், இந்த உதயம் எண் மூலமாக அவர்கள் நேரடியாகப் பலன் பெறலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக














Click it and Unblock the Notifications