Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீரின் காயம் ஆற வேண்டும் எனில் இதை செய்ய வேண்டும்! நீதிபதி கவுல் சொன்னதை கவனிச்சீங்களா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் தீர்ப்பை வாசித்த 5 நீதிபதிகளில் ஒருவரான கவுல், "ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்குவதாக அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இப்படியாக இந்த சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு தற்போது 4 ஆண்டுகள் ஆகிறது.

Justice Kaul urged to investigate the human rights violations in Jammu and Kashmir

இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் திங்கள் மற்றும் வெள்ளி தவிர மற்ற நாட்களில் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு முன்பாக 16 நாட்கள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் தீர்ப்பை வாசித்த 5 நீதிபதிகளில் ஒருவரான சஞ்சய் கிஷன் கவுல், "ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். அதாவது, "1980களிலிருந்து ஜம்மு காஷ்மீரில் ராணுவம், போலீஸ் என அரசு அமைப்புகள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள் என அரசுசாரா அமைப்புகளினால் நடத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக பாரபட்சமற்ற உண்மை மற்றும் நல்லிணக்கக் குழுவை அமைக்க பரிந்துரைக்கிறேன்.

நாம் முன்னோக்கி செல்ல காயங்கள் குணமடைய வேண்டும். அரசு மற்றும் அரசுசாரா அமைப்புகள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்வதுதான் காயங்களைக் குணப்படுத்துவதற்கான முதல் படி. சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப் பிரிவின் உண்மையான நோக்கம் என்பது, ஜம்மு காஷ்மீரை படிப்படியாக இந்தியாவுடன் இணைப்பதுதான். எனவே சட்டப்பிரிவு 367-ல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்ற திருத்தம் பரிந்துரைக்கப்படும்போது, ​​ அதைப் பின்பற்ற வேண்டும்" என்று கூறியுள்ளார்.

மேலும், "ராணுவம் என்பது அரசின் எதிரிகளை எதிர்த்து போரிடுவதற்குதான். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு அல்ல" என்று கூறியுள்ளார். தற்போதுவரை ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் வாசித்துள்ள தீர்ப்பு மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. முன்னதாக தலைமை நீதிபதி வாசித்த தீர்ப்பில், சிறப்பு சட்டப் பிரிவு 370வது ரத்து செய்யப்பட்டது செல்லும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+