மணிப்பூர் விவகாரம்: பிரதமர் பேசியது மட்டும் போதாது.. இந்த 2 ஆக்ஷன் கட்டாயம் வேணும்.. பொங்கிய ஒவைசி
டெல்லி: மணிப்பூர் இனப்படுகொலை நடப்பதாகவும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு பிரதமர் மோடி தள்ளப்பட்டு இருப்பதாகவும் ஐதராபாத் எம்.பி ஓவைசி ஆவேசமாக பேசியுள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பிரேன் சிங் உள்ளார். பழங்குடியின மக்கள் இந்த மாநிலத்தில் அதிகம் வசிக்கின்றனர். இதில் குக்கி இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மைத்தேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க குக்கி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த விவகாரத்தால் கடந்த மே மாதம் 3ம் தேதி இரு பிரிவினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறை இன்னும் அடங்கவில்லை. இதனால் மணிப்பூரில் கடந்த இரண்டரை மாதத்திற்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், தான் நேற்று மணிப்பூரில் நடைபெற்ற கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.
அதாவது மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த 2 பழங்குடியின மக்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து செல்லும் காட்சிகளுடன் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த நிலையில் நேற்று வீடியோ வெளியாகி உள்ளது.
மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நடந்த சம்பவம் ஒட்டு மொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகளை எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் தேசத்திற்கே அவமானம் என்றும் தனது இதயம் கனக்கிறதது எனவும் குற்றவாளிகள் தப்பமுடியாது என்றும் பிரதமர் மோடியும் வேதனையுடன் தெரிவித்தார்.
மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, மணிப்பூர் விவகாரம் குறித்து ஐதாரபாத் எம்.பி ஓவைசி கூறுகையில், " இந்த வீடியோ வேகமாக பரவியதால் பிரதமர் மோடி பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. இனப்படுகொலை அங்கு நடைபெற்று வருகிறது. முதல்வர் பிரேன் சிங்கை பதவி நீக்கம் செய்து விட்டு பிரதமர் மோடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே நீதி நிலை நாட்டப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications