பாகிஸ்தானில் திருமணம்! அந்நாட்டு உளவு அதிகாரிகளுடன் ரகசிய சாட்.. வசமாக சிக்கிய இந்திய யூடியூபர்
டெல்லி: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த வழக்கில் பிரபல யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அதிகாரிகளுடன் ரகசியமாக பேசிய விஷயங்கள் வெளியில் கசிந்துள்ளன.
தற்போது ஜோதி விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார். முன்னதாக ஐஎஸ்ஐ அதிகாரிகளுடன் பேசியபோது, பாகிஸ்தானைப் புகழ்ந்தும், அங்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா 'டிராவல் வித் ஜோ' என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். வெளி ஊர்களுக்கு/மாநிலங்களுக்கு போவது, அந்த பயணத்தை அப்படியே வீடியோவாக எடுத்து தனது சேனலில் வெளியிட்டு வந்திருக்கிறார். வெளி ஊர்களுக்கு மட்டுமல்லாது, அண்டை நாடுகளுக்கும் பயணித்திருக்கிறார். இதில் பாகிஸ்தான் நாட்டுக்கு அதிகம் முறை சென்று வந்திருக்கிறார். இந்த பயணங்களின்போது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷன் அதிகாரி ஒருவரின் அறிமுகம் இவருக்கு கிடைத்திருக்கிறது. இவர் பெயர் டேனிஷ்.
இவர் ஐஎஸ்ஐ உளவாளியான அலி ஹசனுக்கு ஜோவை அறிமுகப்படுத்தியுள்ளார். ஹசனுக்கும், ஜோவுக்கும் இடையில் ஆழமான உறவு இருந்திருக்கிறது. இது எந்த மாதிரியான உறவு என்பது தெரியவில்லை. ஆனால், பல முக்கியமான விவரங்களை ஹசனுடன் ஜோ பகிர்ந்திருக்கிறார். எந்த அளவுக்கு எனில், பாகிஸ்தானை புகழ்ந்தும், பாகிஸ்தானில் என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பான வாட்ஸ்அப் சாட்கள் தற்போது வெளியாகியுள்ளன.
பதிலுக்கு ஹசன் தரப்பில், "ஜோ நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும், வாழ்க்கையில் ஒருபோதும் ஏமாற்றங்களைச் சந்திக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன்" என்று கூறியுள்ளார். உளவாளியிடம் எப்படி ஒருவர் இவ்வளவு நெருக்கமாக இருக்க முடியும்? என்கிற சந்தேகம் வலுவடைந்திருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் பதில் நடவடிக்கையில் இறங்கியிருந்தது. அப்போது இந்தியாவின் எல்லை மாநிலங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. இந்த தகவல்கள் சில நிமிடங்களில் பாகிஸ்தானில் உள்ள உளவாளியான ஹசனுக்கு ஜோ தெரிவித்திருக்கிறார். ட்விஸ்ட் என்னவெனில், டேனிஷிடமும் தொடர்பில் இருந்திருக்கிறார். ஆனால் இந்த மார்ச் மாதத்தில் அவருடனான அனைத்து வாட்ஸ்அப் சாட்களையும் ஜோ டெலிட் செய்திருக்கிறார்.
இந்த விவகாரத்தையடுத்து ஜோ-வின் லேப்டாப், தொலைப்பேசி அழைப்புகள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தபட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications