அமலாக்கத்துறை கேக்குறத பாருங்க.. இதான் பிரச்சனையே.. செந்தில் பாலாஜி வழக்கில் கபில் சிபல் பரபர வாதம்!
டெல்லி: இன்று செந்தில் பாலாஜி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை முன்வைத்து வருகிறார். "இதுதான் பிரச்சனையே" எனக் குறிப்பிட்டு அமலாக்கத்துறைக்கு எதிராக பரபரவென வாதாடி வருகிறார் கபில் சிபல்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர் நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு ஜூன் 21ஆம் தேதி இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஜூலை 17ஆம் தேதி புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

ஹேபியஸ் கார்ப்பஸ் கேஸ்: இதற்கிடையே செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் விசாரித்தார்.
இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியை எப்போது காவலில் எடுக்கலாம் என்பது குறித்து ஏற்கனவே விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் விசாரிக்கும் எனத் தெரிவித்து இருந்தார். அதன்படி நேற்று முன் தினம் விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, உச்ச நீதிமன்றம் முடிவெடுக்கும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது.
சுப்ரீம் கோர்ட்டில் பரபர: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை இன்றைக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் மதியம் 2.15 மணியளவில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டு வருகிறார். நேற்றைய வாதத்தின் தொடர்ச்சியாக, அமலாக்கத்துறைக்கு காவலில் எடுக்கும் அதிகாரம் இல்லை என்பதற்கான வாதங்களை முன்வைத்து வருகிறார் கபில் சிபல்.

கபில் சிபல் இன்றைய வாதங்கள்: காவல்துறை அதிகாரிகளுக்கும் அமலாக்கத்துறையினருக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விஜய் மதன்லால் வழக்கு உத்தரவு தெளிவு படுத்தி உள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகளாக கருதப்பட்டால், இந்திய கிரிமினல் சட்டத்தின் கீழ் அனைத்து அதிகாரங்களும் அவர்களுக்கு இருக்கும்.
அப்படி எல்லா அதிகாரங்களும் இருந்தால் அது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட விதிகளுக்கு முற்றிலும் புறம்பானது. 15 நாட்களுக்கு மேல் சென்றால் அது நீதிமன்றக் காவலாக மட்டுமே இருக்க முடியும். போலீஸ் காவலாக இருக்க முடியாது. ஒருவர் நீதிமன்றக் காவலில் இருக்கும்போது விசாரிக்க எந்தத் தடையும் இல்லை.
செந்தில் பாலாஜி தற்போது சிறையில் தான் இருக்கிறார். வேண்டுமென்றால் இப்போது கூட அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தலாம். போலீஸ் காவலில் இருக்கும் கைதி ரிமாண்டிற்கு முன் அவரது வழக்கறிஞரை சந்திக்க அனுமதிக்கப்படுவார்.
இதுதான் பிரச்சனையே: காவல்துறையின் அதிகாரம் அமலாக்கத்துறையினருக்கு பொருந்துமா என்பதை தீபக் மகாஜன் வழக்கு தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது. ஃபெரா வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் காவலைப் பெறவில்லை. போலீஸ் அதிகாரிகள் தான் போலீஸ் ரிமாண்ட் கோர முடியும். இங்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் காவலை நாடுகின்றனர். இதுதான் பிரச்சனை.
அமலாக்கத்துறை அதிகாரிகள் போலீஸ் அதிகாரிகள் அல்ல. எனவே, பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் 'அத்தகைய காவல்' என்பது நீதிமன்றக் காவலை மட்டுமே குறிக்கிறது. அமலாக்கத்துறை ரிமாண்டில் எடுப்பதை அல்ல. யாரும் அவர்களை விசாரணை செய்வதைத் தடுக்கவில்லை." என வாதிட்டுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications