Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூருக்கு விஜய் தாமதமாக வந்தது ஏன்? ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் CBI துருவி துருவி 8 மணி நேரமாக விசாரணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக மாநில நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆஜராகினர். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோரிடம் 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நாளையும் (செவ்வாய்க்கிழமை) விசாரணை தொடர்கிறது.

மேலும், தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்ளிட்டோரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகினர். சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில் டெல்லியில் விசாரணைக்காக ஆஜராகி விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர்.

Karur Crowd Crush Case TVK State Functionaries Bussy Anand Aadhav Arjuna Questioned for 7 Hours by CBI

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடை​பெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்தை சிபிஐ அதி​காரி​கள் விசா​ரித்து வரு​கின்றனர். அவர்களின் விசாரணையை, உச்சநீதிமன்ற உத்தரவின் படி ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சுமித் சரண், சோனல் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழு கண்காணித்து வருகிறது.

இந்த வழக்​கில், டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் இன்று (டிசம்பர் 29) நடை​பெறும் விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு தவெக பொதுச் செய​லா​ளர் என்​.ஆனந்த், தேர்​தல் மேலாண்மை பிரிவு பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜு​னா, மாநில இணைச் செய​லா​ளர் சிடிஆர்​ நிர்​மல்​கு​மார், கரூர் மேற்கு மாவட்​டச் செயலா​ளர் வி.பி.ம​தி​யழகன், காவல் கண்​காணிப்​பாளர் ஜோஷ் தங்​கை​யா, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்​தன், டிஎஸ்பி செல்​வ​ராஜ், கரூர் நகர ஆய்​வாளர் ஜி.மணிவண்​ணன் ஆகியோ​ருக்கு சம்மன் அனுப்​பப்​பட்​டது.

இந்​நிலை​யில், கரூர் ஆட்​சி​யர் மீ.தங்​கவேல் இன்று டெல்லி சிபிஐ அலு​வல​கத்​தில் விசா​ரணைக்கு ஆஜராகு​மாறு சிபிஐ சம்​மன் அனுப்​பி​யுள்​ளது. இதையடுத்​து, நேற்று முன்​தினம் அவர் டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். இன்று (திங்கட்கிழமை) அவர் விசாரணைக்கு ஆஜராகினார்.

இன்று ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், மதியழகன் உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் இந்த கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மதியழகன் ஆகியோரிடம் 8 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கரூர் பிரச்சாரக் கூட்டத்துக்கு விஜய் தாமதமாக வந்தது பற்றியும், 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி பெறப்பட்ட நிலையில், 25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கூடியது குறித்தும், அனுமதி மீறல் குறித்தும் அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. 8 மணி நேரம் விசாரணை முடிந்து அவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, அவர்களிடம் நாளையும் (செவ்வாய்க்கிழமை) விசாரணை தொடர்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+