"ஒரே பாரதம்.." காசி தமிழ் சங்கமம்.. தமிழர்களுக்கு பிரதமர் மோடியிடம் இருந்து வந்த லெட்டர்!
டெல்லி: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைப் பாராட்டி பல்வேறு தரப்பினரும் பிரதமர் மோடியைப் பாராட்டி கடிதம் எழுதி வருகின்றனர். இதற்கிடையே அவர்களுக்குப் பிரதமர் மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவில் மிகவும் முக்கியமான ஆன்மீக தலங்களில் ஒன்றாக உத்தரப் பிரதேசம் காசி உள்ளது. வரலாற்று ரீதியாகவும் காசிக்கு முக்கிய இடம் உள்ளது. காசிக்கும் தமிழகத்திற்கும் பண்டைய காலத்திலேயே தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசு கடந்த நவ. மாதம் காசி- தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. மிகச் சிறப்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்காகப் பலரும் பிரதமர் மோடியைப் பாராட்டி கடிதம் எழுதி வருகின்றனர்.

பாராட்டு கடிதங்கள்
தமிழ்நாட்டில் இருந்து இதுபோல பல நூறு கடிதங்கள் வந்துள்ளதாகப் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரதமர் மோடி ஒவ்வொரு கடிதத்திற்கும் பதிலளிக்க முயல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதன்படி பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில், "தமிழ்நாட்டு மக்களுடன் காசி நீண்ட தொடர்பைக் கொண்டுள்ளது.. காசி தமிழ்ச் சங்கமம் அந்த வரலாற்று நினைவுகளை மீண்டும் எழுப்பி, நமது நாட்டின் பல்வேறு பகுதிகளும் எப்படி ஆழமாக இணைக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி
மேலும், இந்தியாவின் வளர்ச்சியைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் நமது நாட்டின் ஒற்றுமையை ஆழப்படுத்த ஒவ்வொரு முயற்சியும் முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் காட்டிய அன்பையும், அக்கறையும் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காசி-தமிழ்நாட்டுக்கு இடையேயான பிணைப்பைத் தமிழ்ச் சங்கமம் வெளிக்காட்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.

ஒரே பாரதம்
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்றது ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு மக்கள் வலுசேர்த்துள்ளதாகவும் பிரதமர் மோடி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். காசியில் சிறப்பான நேரத்தைச் செலவிட்டு இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழ் நாட்டின் துடிப்பான கலாச்சாரம் காசியில் கொண்டாடப்பட்டதாகத் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.

காசி தமிழ்ச் சங்கமம்
பிரதமர் மோடிக்குத் தமிழ், ஆங்கிலம், இந்தி அவ்வளவு ஏன் சமஸ்கிருதம் மொழிகளிலும் கடிதம் சென்றதாகவும் அதற்குப் பிரதமர் மோடி பதில் கடிதம் எழுதியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஐஐடி, மெட்ராஸ் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் போன்ற மத்திய பல்கலைக்கழகங்களின் ஆதரவுடன் கல்வி அமைச்சகம் மற்றும் உத்தரப்பிரதேச அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications