சாய்னா பற்றி ஆபாச கருத்து .. அமைச்சர் ட்விட்டரில் காட்டம்.. சிக்கலில் சிக்கி தவிக்கும் சித்தார்த்
டெல்லி: இந்தியாவுக்கு அளப்பரிய சாதனைகளை புரிந்த ஒரு ஆளுமையான சாய்னா நேவால் குறித்து மிகவும் தரம் தாழ்ந்த கருத்துகளை ஒருவர் தெரிவிப்பார் என்றால் அவரது மட்டமான மனநிலையையே காட்டுகிறது என சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கார் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு பாலத்தில் காத்திருக்க வைத்த சம்பவம் அவரது பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு, காவல் துறை உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது.
பிரதமரின பாதுகாப்பு குறைபாடு குறித்து பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் பிரதமருக்கே பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்றால் இந்த தேசத்தில் ஒருவரும் பாதுகாப்பாக இருப்பதாக சொல்ல முடியாது என சாய்னா நேவால் தெரிவித்திருந்தார்.

ஆபாச ஒப்பீடு
இவர் ஜனவரி 5ஆம் தேதி போட்ட ட்வீட்டை நடிகர் சித்தார்த் ரீட்வீட் செய்து சாய்னாவுடன் மிகவும் ஆபாசமான அர்த்தம் கொடுக்கக் கூடிய வார்த்தையை ஒப்பிட்டு பேசியிருந்தார். இது பெரும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இந்தியாவை உலக அரங்கில் பெருமைப்படுத்திய ஒரு ஆளுமையை சர்வ சாதாரணமாக ஆபாசமான கருத்தால் எதிர்கொள்வது எந்த மாதிரியான கோழைத்தனம் என பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

சித்தார்த் விவகாரம்
பிரதமரை பிடிக்காவிட்டால் அவருக்கு ஆதரவானவர்கள் மீது இத்தகைய மோசமான சொல்லடிகளால் வசைப்பாடுவது எந்த மாதிரியான மனநிலை என்றும் நெட்டிசன்கள் கேட்கிறார்கள். சித்தார்த் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவருக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்துள்ளன. கருத்தை நல்ல கருத்தால் எதிர்கொள்ளாமல் இப்படி ஆபாசமாக பேசி பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது சரியா என கண்டனங்கள் பெருகுகின்றன.

சித்தார்த்திற்கு குவியும் கண்டனங்கள்
இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சித்தார்த்தின் பெயரை குறிப்பிடாமல் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் சாய்னா நேவால் விளையாட்டுத் துறையில் செய்த அளப்பரிய சாதனைகளால் இந்தியாவே பெருமை கொள்கிறது. அவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். அதை காட்டிலும் சிறந்த தேசபக்தர்.
Recommended Video

மோசமான கருத்து
இத்தகைய சிறந்த ஆளுமை மீது அது மாதிரியான மோசமான கருத்துகளை ஒருவர் முன்வைக்கிறார் என்றால் அது அவரது மட்டமான மனநிலையையே காட்டுகிறது என்றார். இந்த நிலையில் சித்தார்த் மீது தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்துள்ளது. அதன் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications