சாய்னா பற்றி ஆபாச கருத்து .. அமைச்சர் ட்விட்டரில் காட்டம்.. சிக்கலில் சிக்கி தவிக்கும் சித்தார்த்
டெல்லி: இந்தியாவுக்கு அளப்பரிய சாதனைகளை புரிந்த ஒரு ஆளுமையான சாய்னா நேவால் குறித்து மிகவும் தரம் தாழ்ந்த கருத்துகளை ஒருவர் தெரிவிப்பார் என்றால் அவரது மட்டமான மனநிலையையே காட்டுகிறது என சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் கார் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு பாலத்தில் காத்திருக்க வைத்த சம்பவம் அவரது பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பியது. இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு, காவல் துறை உள்ளிட்டோரிடம் விளக்கம் கேட்கப்பட்டு வருகிறது.
பிரதமரின பாதுகாப்பு குறைபாடு குறித்து பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் பிரதமருக்கே பாதுகாப்பில் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்றால் இந்த தேசத்தில் ஒருவரும் பாதுகாப்பாக இருப்பதாக சொல்ல முடியாது என சாய்னா நேவால் தெரிவித்திருந்தார்.

ஆபாச ஒப்பீடு
இவர் ஜனவரி 5ஆம் தேதி போட்ட ட்வீட்டை நடிகர் சித்தார்த் ரீட்வீட் செய்து சாய்னாவுடன் மிகவும் ஆபாசமான அர்த்தம் கொடுக்கக் கூடிய வார்த்தையை ஒப்பிட்டு பேசியிருந்தார். இது பெரும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. இந்தியாவை உலக அரங்கில் பெருமைப்படுத்திய ஒரு ஆளுமையை சர்வ சாதாரணமாக ஆபாசமான கருத்தால் எதிர்கொள்வது எந்த மாதிரியான கோழைத்தனம் என பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

சித்தார்த் விவகாரம்
பிரதமரை பிடிக்காவிட்டால் அவருக்கு ஆதரவானவர்கள் மீது இத்தகைய மோசமான சொல்லடிகளால் வசைப்பாடுவது எந்த மாதிரியான மனநிலை என்றும் நெட்டிசன்கள் கேட்கிறார்கள். சித்தார்த் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இவருக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் வலுத்துள்ளன. கருத்தை நல்ல கருத்தால் எதிர்கொள்ளாமல் இப்படி ஆபாசமாக பேசி பெண்ணுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது சரியா என கண்டனங்கள் பெருகுகின்றன.

சித்தார்த்திற்கு குவியும் கண்டனங்கள்
இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சித்தார்த்தின் பெயரை குறிப்பிடாமல் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் சாய்னா நேவால் விளையாட்டுத் துறையில் செய்த அளப்பரிய சாதனைகளால் இந்தியாவே பெருமை கொள்கிறது. அவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர். அதை காட்டிலும் சிறந்த தேசபக்தர்.
Recommended Video

மோசமான கருத்து
இத்தகைய சிறந்த ஆளுமை மீது அது மாதிரியான மோசமான கருத்துகளை ஒருவர் முன்வைக்கிறார் என்றால் அது அவரது மட்டமான மனநிலையையே காட்டுகிறது என்றார். இந்த நிலையில் சித்தார்த் மீது தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்துள்ளது. அதன் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications