வங்கிகளில் பணம் வாங்கி ரூ. 1400 கோடி மோசடி...சிபிஐ 4 மாநிலங்களில் ரெய்டு!!
டெல்லி: இந்தியன் வங்கி உள்பட பல்வேறு வங்கிகளில் ரூ. 1400 கோடி அளவிற்கு கடன் பெற்று செலுத்தாமல், மோசடி செய்த வகையில் டெல்லியைச் சேர்ந்த குவாலிட்டி லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான நாட்டின் பல்வேறு இடங்களில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லியை இருப்பிடமாகக் கொண்டு செயல்படும், இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் சஞ்சய் திங்க்ரா, சித்தாந்த் குப்தா, அருண் ஸ்ரீவஸ்தவா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ''இந்திய வங்கிகளின் கீழ் வரும் பிஓஐ, கனரா வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஆந்திரா வங்கி, கார்பரேஷன் வங்கி, ஐடிபிஐ, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, தனலட்சுமி வங்கி, சிண்டிகேட் வங்கி ஆகியவற்றில் மோசடி செய்து பணம் பெற்றுள்ளனர். இந்த வங்கிகளில் வாங்கப்பட்ட பணத்தை திசை திருப்புதல், மோசடி முறையில் பரிவர்த்தனை செய்தது, இட்டுக்கட்டப்பட்ட ஆவணங்கள், ரசீதுகள், பொய்யான கணக்குகளை காண்பித்து கடன் பெற்றது என்று அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இதையடுத்து டெல்லி, சஹரன்பூர், புலந்த்சர் (உத்தரப்பிரதேசம்), அஜ்மீர் (ராஜஸ்தான்), பல்வால் (ஹரியானா) உள்பட 8 இடங்களில் சிபிஐ இன்று சோதனை மேற்கொண்டது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications