குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் "லாலு பிரசாத் யாதவ்.." அங்கதான் ட்விஸ்ட்!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் உட்பட 11 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்து உள்ளனர்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.

பாஜக தீவிரம்
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பாஜக முழு மூச்சாக இறங்கி இருக்கிறது. கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாஜக, மத்திய அரசு இனி வரும் காலங்களில் கொண்டு வரும் முக்கிய மசோதாக்களை ஒருமனதாக ஏற்கும் வகையில் தங்களுடன் ஒத்த கொள்கை கொண்டவரை குடியரசுத் தலைவராக நியமிக்க திட்டமிட்டு இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டம்
இந்த நிலையில் நேற்று மம்தா பானர்ஜி நடத்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 13 கட்சிகள் பங்கேற்றன. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த பலரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அவர் அதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். எனவே மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், கடந்த முறை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டவருமான கோபாலகிருஷ்ண காந்தியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகள் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வேட்பு மனுத்தாக்கல்
இதற்கிடையே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 11 பேர் தங்கள் வேட்புமனுவை மாநிலங்களவை தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்தனர். இவர்கள் தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். மேலும் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனுவை வாபஸ் பெருவதற்கான கடைசி நாள் ஜூலை 2 ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

லாலு பிரசாத் யாதவ்
இதில் கூடுதல் சுவரஸ்யமான தகவல் என்னவென்றால் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் பெயர் கொண்ட நபரும் இதில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அவர் பீகார் மாநிலம் சரன் பகுதியை சேர்ந்தவர். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன மோசடி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
எங்க வந்து யாருக்கிட்ட.. கொங்கு மண்டலத்துக்கு உதயநிதி மாஸ் பிளான்.. களமிறங்கும் இளைஞரணி -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க












Click it and Unblock the Notifications