கரும்புள்ளியாய் தொடரும் தேசத்துரோக சட்டப்பிரிவு 124ஏ! ரத்து செய்ய கூடாது என சட்ட ஆணையம் வலியுறுத்தல்
டெல்லி: நாடு சுதந்திரமடைந்து முக்கால் நூற்றாண்டு ஆகியுள்ள நிலையில், காலணியதுவத்தின் எச்சமாக இருக்கும் 'தேசத்துரோக' சட்டப்பிரிவு 124ஏ தேவையா? என்று கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் இந்த சட்டம் தேவைதான் என்று சட்ட ஆணையம் கூறியுள்ளது.
கடந்த 1947ம் ஆண்டு நாடு சுதந்திரமமைடந்த பின்னரும், ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற ஏராளமான எதிர்மறையான விஷயங்கள் இன்னும் நம்முடன் தொடர்ந்துதான் வந்துக்கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமானது தேசத்துரோக சட்டம். இந்த சட்டத்தின் 124ஏ பிரிவு கருத்துரமையை நசுக்குவதாக சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இதனை நீக்குவது தொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகளை தொடுத்திருக்கின்றனர்.

இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில், இந்த சட்டப்பிரிவு வேண்டுமா? என்றும் கேள்வியெழுப்பியிருந்தது. இதனையடுத்து மத்திய அரசு இதற்கு பதிலளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இதுபோன்ற 1,500 சட்டப் பிரிவை நீங்கியுள்ளது. இதனால் சுமார் 25,000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. அதேபோல இந்த 124ஏ சட்டப் பிரிவை நீக்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது" என்று கூறியிருந்தது.
இந்நிலையில், 22 சட்ட ஆணையத்தின் தலைவரும், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான ரிது ராஜா அஸ்வதி, தேசத்துரோக சட்டத்தின் பிரிவு 124ஏ கட்டாயம் தேவை என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதியுள்ளதாவது, "இந்திய தண்டனைச் சட்டத்தில் 124A பிரிவைத் தக்க வைத்துகொள்ள வேண்டும். இருப்பினும் இதில் சில திருத்தங்கள் அவசியமாகிறது.
அதாவது குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டுகளாக இருக்கிறது. அதேபோல அதிகபட்சமாக ஆயுள் தண்டனை இருக்கிறது. இதில் இந்த குறைந்தபட்ச தண்டனை அண்டுகளை ஒற்றைப்படையிலிருந்து இரட்டைப்படைகளாக மாற்ற வேண்டும். அல்லது 7 ஆண்டுகளாக உயர்த்தப்பட வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் பலர் தவறாக தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. எனவே இதனை தடுக்க, தடுக்க மத்திய அரசு மாதிரி வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.
124ஏ சட்டப்பிரிவு 'காலனித்துவ மரபு' என்கிற ஒற்றை காரணத்திற்காகவே இதனை ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை இந்த சட்டப்பிரிவு இல்லாமல் போய்விட்டது எனில், அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டுபவர்களை கைது செய்ய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைதான் பயன்படுத்த வேண்டியிருக்கும். இது 124ஏ சட்டப் பிரிவைவிட கொடூரமானதாகும். மற்ற நாடுகள் இது போன்ற சட்டங்களை நீக்கிவிட்டது என்பதற்காக இந்தியாவும் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை.
மேலும், இப்படி செய்வது உண்மைக்கு புறம்பானதாக இருக்கும். மட்டுமல்லாது நீதிமன்றம் தனது பொன்னான நேரத்தில் இதில் செலவிட வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications