சிபிஐ ரெய்டில் சிக்கிய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.. கெஜ்ரிவால் கணிப்பின்படி கைது?
டெல்லி: மதுபான கொள்கை சர்ச்சையில் சிக்கி சிபிஐ ரெய்டில் சிக்கியிருக்கும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இவ்வழக்கில் கைது செய்யப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Recommended Video
டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை என்பது அரசிடம் இருந்து கைமாறிய 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.

உதாரணமாக லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டது; விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது என பாஜகவின் மீனாட்சி லேகி குற்றம் சாட்டி இருந்தார். இப்படி
முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டதால் தலைமை செயலாளர் நரேஷ் குமார், அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டிருந்த்ஹார். இதனடிப்படையில் கடந்த ஜூலை மாதம் டெல்லி யூனியன் பிரதேச தலைமை செயலாளர் ஆளுநருக்கு அறிக்கை தந்தார்.
அந்த அறிக்கையில், ஜிஎன்சிடிடி சட்டம், தொழில் பரிவர்த்தனை விதி , டெல்லி உற்பத்தி வரி சட்டம் , டெல்லி உற்பத்தி வரி ஆகியன மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதில் மதுபான உரிமங்கள் வழங்குவதற்கு சலுகைகள் காட்டப்பட்டது; அரசுக்கு இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டது; உற்பத்தி வரித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாதான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மேலும் கலால்துறையில் 11 அதிகாரிகளையும் ஆளுநர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார்.

மேலும் டெல்லி அரசின் புதிய கலால் கொள்கைக்கு ஆளுநர் சக்சேனா அனுமதியும் தரவில்லை. இதனால் டெல்லி அரசின் புதிய கலால் கொள்கை வாபஸ் பெறப்படுகிறது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்தார். இதனால் டெல்லியில் 468 தனியார் மதுபானக் கடைகள் ஆகஸ்ட் 1-ந் தேதியுடன் மூடப்படும். இனிமேல் அரசு மதுபான கடைகள் மட்டுமே இயங்கும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில்தான் டெல்லியில் மணீஷ் சிஷோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் 7 மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பழிவாங்கும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். மேலும் ஏற்கனவே மணீஷ் சிஷோடியாவை கைது செய்வார்கள் எனவும் கெஜ்ரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications