தியேட்டர், மதுக் கடைகள் மூடப்பட்டிருக்கும்.. ஊரடங்கு தளர்வு எதெற்கெல்லாம் பொருந்தாது? லிஸ்ட் இதோ
டெல்லி: காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருப்பதற்கு இதுவரை வழங்கிய அனுமதியை இன்னும் நீட்டிப்பு செய்து, பிற கடைகளையும், சனிக்கிழமை முதல் திறந்து கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Recommended Video
இதன்படி குடியிருப்பு பகுதிகளில் உள்ள பல வகை கடைகளும் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். எவையெல்லாம் இயங்காது என்பது குறித்தும், அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த மாதிரி கடைகளுக்கு திறக்க அனுமதியில்லை என்பது குறித்து, பார்க்கலாம், வாருங்கள்.

மால்களுக்கு தடை
நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் எல்லைக்கு வெளியே இருந்தாலும் மல்டி பிராண்ட் மற்றும் ஒற்றை பிராண்ட் மால்களில் கடைகள் திறக்கப்படாது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின் எல்லைக்குள் சந்தை வளாகங்கள், மல்டி பிராண்ட் மற்றும் ஒற்றை பிராண்ட் மால்களில் உள்ள கடைகள் திறக்கப்படாது.

தியேட்டர்கள் நோ
தியேட்டர்கள், ஷாப்பிங் வளாகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், பார்கள் மற்றும் ஆடிட்டோரியங்கள், மக்கள் கூடும் அரங்குகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். பெரிய கடைகள் / பிராண்டுகள் / சந்தை பகுதிகள் மூடப்பட்டு இருக்கும். நகர்ப்புற [நகராட்சி] பகுதிகளில், நேரு பிளேஸ், லஜ்பத் நகர் போன்ற சந்தை வளாகங்கள் திறக்கப்படாது.

கடைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டியது எது?
திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் இவைதான்: சனிக்கிழமை முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட நகராட்சிகள் மற்றும் நகராட்சி நிறுவனங்களின் எல்லைக்குள் மற்றும் வெளியே உள்ள அனைத்து கடைகளிலும், கட்டாயமாக 50 சதவீத தொழிலாளர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும்.

சமூக இடைவெளி
தொழிலாளர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கொரோனா வைரஸ் லாக்டவுனுக்கு மத்தியில் சனிக்கிழமையான இன்று முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும்.

லாக்டவுன் தளர்வுகள் எதற்கெல்லாம் பொருந்தாது?
இந்த தளர்வுகள் ஹாட்ஸ்பாட்கள் மற்றும் கன்டெய்ன்மென்ட் மண்டலங்களுக்கு பொருந்தாது. மதுபானக் கடைகளைப் பொறுத்தவரை, அந்தந்த மாநில / யூனியன் பிரதேசத்தின் 'கடைகள் மற்றும் ஸ்தாபனச் சட்டத்தின்' கீழ் வருபவை அல்ல, மது ஒரு தனி பிரிவின் கீழ் வருகிறது என்று உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே, மதுபானம் விற்பனைக்கு அனுமதியில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் அதிகரிக்கும்
புனித ரமலான் மாதம் துவங்கியுள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளை வழங்கும் கடைகளை மீண்டும் திறக்க உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு, மக்களுக்கு நிம்மதியை தந்துள்ளது. மார்ச் 24 முதல் நாடு லாக்டவுன் நிலையில் இருக்கும் நிலையில், முதல் முறையாக இவ்வாறு ஒரு தளர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால், வணிகர்கள் மூலமாக, கொரோனா பரவாது.
-
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு!












Click it and Unblock the Notifications