தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் டைம் வேணும் .. தேர்தல் ஆணையம் கூறும் காரணம் இது தான்
டெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாது என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் இறுதி வரை தங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என, தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக வழக்கறிஞர் ஜே.எஸ்.சுகின் தாக்கல் செய்த மனுவிற்கு, தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தமிழகத்தில் அக்டோபர் 31 வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது என கூறியுள்ளது.
வார்டு மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், மாநிலத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் வார்டு வரையறை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அக்டோபர் இறுதி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தமிழக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது
நாளை மறுநாள் வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் கோரி பதில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications