எக்சிட் பிளானை பொறுத்தே முடிவு.. மாநில அரசுகளிடம் கேட்ட மோடி.. லாக்டவுன் 4.0 எப்படி இருக்கும்?
டெல்லி: இந்தியாவில் லாக்டவுன் 4.0 குறித்து பிரதமர் மோடி பின்னர் அறிவிக்கப்படும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெரும்பாலும் மாநில அரசுகள் லாக்டவுன் குறித்த எக்சிட் பிளான்களை அளித்த பின் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்கிறார்கள்.
Recommended Video
இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடி இன்று மக்கள் முன்னிலையில் பேசினார். அதன்படி இந்தியாவில் லாக்டவுன் 4.0 அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும்.
இதில் விதிமுறைகள் மிகவும் வேறுபாடுடன் இருக்கும். புதிய லாக்டவுன் 4.0 குறித்து மே 18-ந் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார் .

மோடி நடந்தது
லாக்டவுன் குறித்து பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை செய்தார். லாக்டவுனை நீடிப்பது என்றால் எப்படி நீட்டிப்பது, முடிவிற்கு கொண்டு வருவது என்றால் எப்படி முடிவிற்கு கொண்டு வருவது என்று ஆலோசனை செய்தார். இதில் பெரும்பாலான முதல்வர்கள் தளர்வுகளுடன் லாக்டவுனை நீட்டிக்கலாம் என்று கூறியுள்ளனர். இன்னும் சில முதல்வர்கள் லாக்டவுனை இதேபோல் தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மோடி கோரிக்கை
இந்த நிலையில் எல்லா மாநிலங்களிடமும் பிரதமர் மோடி எக்சிட் பிளான் குறித்து கேட்டறிந்தார். அதாவது லாக் டவுனை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்துவது என்பது குறித்து பிரதமர் மோடி கேட்டார். இது தொடர்பான எக்சிட் பிளானை எல்லா மாநிலங்களும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார். மே 15ம் தேதிக்குள் எக்சிட் பிளான்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மோடி கோரிக்கை வைத்தார்.

எக்சிட் பிளான் வேண்டும்
இந்த நிலையில் இந்த எக்சிட் பிளானை பொறுத்தே லாக்டவுன் 4.0 மத்திய அரசு முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. அதாவது மே 15ம் தேதி எல்லா மாநிலங்களும் தங்களின் திட்டங்களை வகுத்த பிறகே மத்திய அரசு இதில் முடிவு எடுக்கும். ஆனால் லாக்டவுனை நீட்டிப்பது கண்டிப்பாக நடக்கும். அதில் மாற்றம் இல்லை. லாக்டவுன் எப்படி இருக்கும், என்னென்ன தளர்வுகள் வரும் என்பது மட்டும் மாநில அரசுகளின் எக்சிட் பிளான் அறிக்கையை பொறுத்தே அமையும்.

மோடி சொன்னது என்ன
மேலும் மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும். இந்த லாக்டவுன் வேறு மாதிரி இருக்கும் என்று மோடி கூறியுள்ளார். ஆகவே இந்தியாவில் பெரும்பாலும் பெரிய அளவில் தளர்வுகள் கொண்டு வரப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும். பெரிய அளவில் மற்ற இடங்களில் தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications