கட்டுப்படாத கொரோனா டெல்லியில் ஊரடங்கு மேலும் 1 வாரம் நீட்டிப்பு - கெஜ்ரிவால் அறிவிப்பு
நாட்டின் தலைநகர் டெல்லியில் அமலில் உள்ள முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது முடக்கத்தை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். வரும் 3ஆம் தேதி காலையுடன் முழு ஊரடங்கு முடிவிற்கு வரும் நிலையில், மே 10ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியம் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. அங்கு தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 19ஆம் தேதி இரவு முதல் 26ஆம் தேதி காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார்.
கொரோனா கட்டுப்பட்டதாக தெரியவில்லை தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வந்தால், இரண்டாவது முறையாக முழு ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தினசரி பாதிப்புகளும் மரணங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சுடுகாடுகளில் சடலங்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன.
தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன்றைய தினம் ஒரு மருத்துவர் உட்பட 12 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பவர்களின் இறப்பு விகிதமும் தினசரி அதிகரித்துக்கொண்டே செல்வதால் லாக்டவுன் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை 3ஆம் தேதி காலையுடன் முழு ஊரடங்கு முடிவிற்கு வரும் நிலையில், மே 10ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications