லோக்சபா தேர்தல் 2019 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஓவர்
Recommended Video
Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
டெல்லி: லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் உட்பட மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.
தேர்தல் தொடர்பான உடனுக்குடன் செய்திகளுக்கு இந்த லைவ் பக்கத்தில் நீங்கள் இணைந்திருங்கள்.
Newest First Oldest First
தமிழகத்தில் 37 லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது
தமிழகத்தில் 37 லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. புதுச்சேரி தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுரையில் மட்டும் இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
மக்கள் தெளிவாக உள்ளனர்- வடிவேலு
மக்களுக்கு நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் தெளிவாக உள்ளார்கள். தேர்தல் என்பது திருவிழாவுக்கு சமம். யார் வந்தாலும் மக்களை காப்பாற்ற வேண்டும். சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பின் நடிகர் வடிவேலு பேட்டி. முன்னதாக வாக்குச்சாவடிக்குள் போட்டோ எடுத்தபோது, டான்ஸ் ஆடி காமெடி செய்தார் வடிவேலு.
தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 52.02 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழகம்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 52.02 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாகவும், கரூரில் அதிகபட்சமாக 56.85% வாக்குகள் பதிவாகியுள்ளது என்றும், குறைவாக சென்னை மத்திய தொகுதியில் வாக்குப்பதிவாகியுள்ளன என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சி திட்டம்?
வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாக ஆணையர், டிஜிபியிடம் திமுக புகார் கடிதம் அளித்துள்ளது. வாக்குச் சாவடிகளை கைப்பற்ற போலீஸ் ஒத்துழைக்கும் வகையில் பாதுகாப்பை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக புகார். வாக்குச் சாவடி உள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்களை செயலிழக்கவும் திட்டமிட்டுள்ளதாக புகார்.
வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சி திட்டம் என திமுக கடிதம் #TNElection2019 #VotingRound2 pic.twitter.com/qjhwZAKvSP
— Oneindia Tamil (@thatsTamil) April 18, 2019
85 வயதில் முதல்முறையாக வாக்களித்த கன்னியப்பன்
தமிழகம்: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். சிறு வயது முதலே கொத்தடிமை வாழ்க்கையில் சிக்கிக் கொண்டார். இவர் தற்போது 85 ஆவது வயதில் முதல்முறையாக தனது வாக்கை பதிவு செய்தார். இதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் கன்னியப்பனை ஆட்சியர் அழைத்து வந்தார்.
READ MORE
Comments
lok sabha elections 2019 tamil nadu by election 2019 election லோக்சபா தேர்தல் 2019 தமிழக இடைத் தேர்தல் 2019 தேர்தல்
English summary
Voting for Phase 2 Lok Sabha Election will take place on April 18, Today. 11 states and 1 union territory will vote to elect representatives on 95 seats. Here you can find live updates.