தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டி இல்லை? இன்று 100 வேட்பாளர்களை அறிவிக்கும் பாஜக
டெல்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 100 வேட்பாளர்களை பாஜக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது. முதல் கட்ட பட்டியலில் பிரதமர் மோடி- வாரணாசி, மத்திய அமைச்சர் அமித்ஷா- காந்திநகர், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் - லக்னோ தொகுதிகளில் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
18-வது லோக்சபா தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அடுத்து வரும் சில நாட்களில் வெளியிடக் கூடும். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்டவை கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நிறைவு செய்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களை அறிவிப்பதிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று இரவு பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 4 மணிநேரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாகவும் இந்த பட்டியல் இன்று வெளியாகும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட இருக்கிறதாம். பிரதமர் மோடி மீண்டும் உ.பி. வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறாராம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத்தின் காந்தி நகரிலும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி. லக்னோ தொகுதியிலும் போட்டியிடக் கூடுமாம்.
முன்னதாக பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போதைய தகவல்களின்படி பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிடுவார் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
மேலும் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், பூபேந்தர் யாதவ், ஜோதிராதித்ய சிந்தியா, முரளீதரன் சர்பானந்த் சோனோவால் உள்ளிட்டோரும் லோக்சபா தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளனராம். இப்பட்டியலில் நிறைய புதுமுகங்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட இருக்கிறதாம். உதாரணமாக மேற்கு வங்க மாநிலம் அன்சோலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் நடிகர் சத்ருகன் சின்ஹாவுக்கு எதிராக போஜ்பூரி நடிகர் பவன் சிங்கை களமிறக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாம்.
அத்துடன் 2019 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிக்குப் போராடிய தொகுதிகள், தோல்வி அடைந்த தொகுதிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பலமான வேட்பாளர்களை களமிறக்குவது எனவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக












Click it and Unblock the Notifications