நாடாளப் போவது யார்? லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல்- இன்று மாலை 6 மணி முதல் ஒன் இந்தியா தமிழில்!
டெல்லி: 18-வது லோக்சபா தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் (Exit Poll, எக்ஸிட் போல் முடிவுகள்) உங்கள் ஒன் இந்தியா தமிழில் இன்று மாலை 6 மணி முதல் தொடர்ந்து இடம் பெறும்.
18-வது லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை 6 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. லோக்சபா தேர்தலின் 7-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு இன்று மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

லோக்சபா தேர்தல் அனைத்து கட்ட வாக்குப் பதிவுகளும் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்துவிடும். இதனையடுத்து லோக்சபா தேர்தலில் பதிவான அனைத்து வாக்குகளும் ஜூன் 4-ந் தேதி எண்ணப்படும்.
அதற்கு முன்னதாக, லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தக் கூடிய "தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள்" அதாவது ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவுக்கும் பின்னர் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தனர் என்பதை வெளிப்படுத்துகிற எக்ஸிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன.
லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்தும் இன்று மாலை 6 மணி முதல் அடுத்தடுத்து வெளியாகும். ஜூன் 4-ந் தேதி ரிசல்ட்டுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த எக்ஸிட் போல் முடிவுகளை உடனுக்குடன் உங்கள் ஒன் இந்தியா தமிழ் இணைய தளத்தில் இன்று மாலை 6 மணி முதல் அப்டேட் செய்வதை பார்க்க முடியும்.
உள்ளூர் ஊடகம் முதல் தேசிய ஊடகங்கள் வரை பெரும்பாலானவை எக்ஸிட் போல் முடிவுகளை வெளியிடுகின்றன. ஒவ்வொரு ஊடகம் வெளியிடும் எக்ஸிட் போல் முடிவுகள் உங்கள் ஒன் இந்தியா தமிழில் லைவ்வாக இன்று மாலை 6 மணி முதல் இடம் பெற இருக்கிறது.
நமது வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, எக்ஸிட் போல் முடிவுகள் லைவ் பேஜ் மற்றும் ஆழமான அலசல்கள் என விரிவாக நமது ஒன் இந்தியா தமிழ் தளத்தில் இடம் பெற இருக்கிறது. நமது வாசகர்கள் எப்போதும் போல் மிஸ் செய்யாமல் எக்ஸிட் போல் முடிவுகளின் துல்லியத்தை நமது ஒன் இந்தியா தளத்தில் காணலாம்.












Click it and Unblock the Notifications