நாடே எதிர்பார்க்கும் 4ஆம் கட்ட தேர்தல்..உதவுமா உபி? ஓங்குமா ஒடிசா? எத்தனை தொகுதிகளில் தேர்தல்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்கும் 10 மாநிலங்களில் இதுவரை வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள தொகுதிகள்.. இனி வாக்குப்பதிவு நடக்கப்போகும் தொகுதிகள் எவை என விரிவாக பார்க்கலாம்..

இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அடுத்து நான்கு கட்ட தேர்தல்கள் நடைபெற இருக்கிறது.

Lok Sabha Elections 2024 10 states to face fourth phase elections tommorrow

ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது இந்திய ஜனநாயகத்தின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது.

மக்களவை தேர்தல்: ஏற்கனவே ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் நாளை 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதோடு சேர்த்து ஆந்திராவுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. மேலும் ஒடிசாவில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலை பொருத்தவரை ஆந்திராவில் 25 தொகுதிகளும், தெலுங்கானாவில் 17 தொகுதிகளும், பிஹாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேச மாநிலத்தில் 8 தொகுதிகளும் நான்காம் கட்ட தேர்தலை சந்திக்கின்றன.

4ஆம் கட்ட தேர்தல்: இவை மட்டுமல்லாமல் மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், ஒடிசாவில் நான்கு தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் எட்டு தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகள் நாடாளுமன்ற நான்காம் கட்ட தேர்தலை சந்திக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

வாக்குப் பதிவு: தெலுங்கானாவில் 17 தொகுதிகள் தேர்தலை சந்திக்கின்றன. பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகள் இருக்கும் நிலையில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நாளை 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதேபோல ஜார்கண்டில் 14 தொகுதிகள் இருக்கும் நிலையில் நாளை 4 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் 29 தொகுதிகள் இருக்கும் நிலையில் 21 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது இதை அடுத்து எட்டு தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

எத்தனை தொகுதிகள்: இதேபோல மகராஷ்டிரா மாநிலத்தில் 48 தொகுதிகள் இருக்கும் நிலையில் இதுவரை 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்து இருக்கிறது. நாளை நான்காம் கட்ட வாக்குப்பதிவில் அங்கு 11 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. ஒடிசா மாநிலத்தில் 21 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் நாளை 4 தொகுதிகளில் மட்டுமே வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் இருக்கும் நிலையில் 26 தொகுதிகளில் இதுவரை வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. 13 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.

நட்சத்திர வேட்பாளர்கள்: மேற்குவங்க மாநிலத்தில் 42 தொகுதிகளில் 10 தொகுதிகளில் இதுவரை தேர்தல் நடைபெற்றிருக்கிறது. மேலும் நாளை எட்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் நாளை ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவ், மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் தேர்தலை சந்திக்கின்றனர்.

பலத்த பாதுகாப்பு: தேர்தலை ஒட்டி மேற்கண்ட 10 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது துணை ராணுவத்தினருடன் உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து தேர்தலை நடத்த தீவிரம் காட்டி வருகின்றனர் தேர்தல் ஆணையமும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+